இந்நிலையில், ஆகஸ்ட் 5ம் தேதியன்று ஒப்பந்தம் எடுத்த தனியார் ஆலையில் முன்பாக ஆல்பர் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு 4 இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் ஆல்பர்ட் மீது இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளனர். இதில், நிலை குலைந்த ஆல்பர்ட்டை முகம், தலை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டி விட்டு தடுக்க வந்த அவரது நண்பர்களையும் வெட்டிவிட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. இதில், ஆல்பர்ட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.