உன்னை பலாத்காரம் செய்த வீடியோ இருக்கு! நான் கூப்பிடும் போதெல்லாம் வரணும்! அண்ணணு சொல்லி நாசம் செய்த கொடூரம்.!

First Published May 20, 2023, 3:15 PM IST

கல்லூரி மாணவியை நண்பர் வீட்டுக்கு அழைத்து சென்று குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் பிபின் பிரியன்(29). கார் ஓட்டுநராக உள்ளார். பொறியியல் கல்லூரியில் படித்து வரும் இவரது உறவுக்கார பெண்ணுடன் பழகி வந்துள்ளார். இந்த மாணவிக்கு  உடன்பிறந்தவர்கள் இல்லாத நிலையில் பிபினை அண்ணனாகவே அழைத்து பழகி வந்தார். அந்த மாணவி வெளியே எங்கு சென்றாலும் பிபின் பிரியனை அழைத்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். 

இந்நிலையில், சம்பவத்தன்று பிபின் பிரியன் தனது நண்பரின் காரில் மாணவியை காரில் ஏற்றி கல்லூரியில் இருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது செல்லும் வழியில் திருநயினார்குறிச்சியில் வந்த போது தனது நண்பரை பார்க்க வேண்டும் என கூறி நண்பரின் வீட்டிற்கு அழைத்து சென்றார்.

அந்த மாணவி மயக்க மருந்து கலந்து கொடுத்த குளிர்பானத்தை கொடுத்துள்ளார். அதை குடித்த சிறிது நேரத்திலேயே அந்த மாணவி மயங்கினார். 

அப்போது பிபின் பிரியன் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார். இதை வீடியோ மற்றும் போட்டோவாக பதிவு செய்து வைத்துள்ளார். சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்த மாணவியை மீண்டும் காரில் ஏற்றி வீட்டில் கொண்டு விட்டார். மயக்கத்தில் இருந்ததால் நடந்தவை குறித்து மாணவிக்கு தெரியவில்லை. 

மறுநாள் மாணவியின் செல்போனில் பேசிய பிபின் பிரியன் உன்னை பலாத்காரம் செய்த ஆபாச வீடியோ என்னிடம் உள்ளது. எனவே நான் அழைக்கும் போதெல்லாம் எனது ஆசைக்கு இணங்க வேண்டும் என இல்லையென்றால் சமூக வலைதளங்களில் வெளியிட்டு  விடுவதாக மிரட்டியுள்ளார். 

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவி குளச்சல் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் பிபின் பிரியன் மீது போலீசார் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடிவருகின்றனர். 

click me!