இந்நிலையில், சரவணன் நேற்று இரவு திண்டுக்கல் அண்ணாநகர் சவுக்கு தோப்பு பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அவரை பின்தொடர்ந்து காரில் வந்த மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்து சரவணனை சரமாரியாக வெட்டியது. இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த சரவணன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர், அந்த கும்பல் அங்கிருந்து தப்பித்து சென்றது.