அப்போது, இருசக்கர வாகனத்தில் சித்ரப் பிரியாவை அழைத்து சென்றது உண்மை தான். ஆனால் அவரை வீட்டில் கொண்டு விட்டதாகவும் அலன் கூறினார். இதைத் தொடர்ந்து அவரை போலீசார் அனுப்பி வைத்தார். இதனிடையே அவரது வீட்டில் இருந்து சுமார் 1 கிமீ தொலைவில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சித்ரப் பிரியாவின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எர்ணாகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். சந்தேகத்தின் பேரில் போலீசார் மீண்டும் காதலன் அலனிடம் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, தான் குடிபோதையில் சித்ரப் பிரியாவை தலையில் கல்லால் அடித்து கொலை செய்ததை ஒப்பு கொண்டார். இதையடுத்து காதலன் அலனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.