இந்நிலையில் தர்ஷிதாவுக்கும் அவரது உறவுக்கார இளைஞரான அதே கிராமத்தை சேர்ந்த சித்தராஜு என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. திருமணமாகி கேரளா சென்ற பிறகும் தர்ஷிதா, சித்தராஜியுடனான தொடர்பை கைவிடவில்லை. இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 22ம் தேதி சுபாஷின் வீட்டில் இருந்து 30 சவரன் நகை மற்றும் ரூ. 5 லட்சம் திருடு போனது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே மருமகள் தர்ஷிதாவும் மாயமானாதால் இந்த கொள்ளைக்கும் அவருக்கும் தொடர்பு இருக்கமோ என போலீசாருக்கு சந்தேகம் அடைந்தனர்.