இந்நிலையில், நேற்று இரவு தனது காரில் டிரைவருடன் சென்னையில் இருந்து தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். கார் பூந்தமல்லி நசரத்பேட்டை சிக்னல் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென வழிமறித்த கும்பல் காரின் மீது நாட்டு வெடிகுண்டை வீசியுள்ளனர். அப்போது, காரில் இருந்து இறங்கி பி.பி.ஜி.சங்கர் சாலையில் ஓடியுள்ளார்.