பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5ம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் இதுவரை 25க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில், ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய கொலையாளிகளுக்கு 10 லட்ச ரூபாய் வரை நிதி உதவி வழங்கியதாக பெண் தாதாவும், பாஜக முன்னாள் நிர்வாகியுமான அஞ்சலையை போலீசார் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தார்.