கூடுவாஞ்சேரியில் பயங்கரம்.. பட்டப்பகலில் 17 வயது சிறுவன் ஓட ஓட விரட்டி படுகொலை..!

Published : Nov 15, 2023, 10:54 AM IST

சென்னை கூடுவாஞ்சேரியில் 17 வயது சிறுவன் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
13
கூடுவாஞ்சேரியில் பயங்கரம்.. பட்டப்பகலில் 17 வயது சிறுவன் ஓட ஓட விரட்டி படுகொலை..!

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த காரணி புதுச்சேரி அண்ணா நகர் பகுதியில் சேர்ந்தவர் தனுஷ் (17). இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், வீட்டில் இருந்த சிறுவனை இரண்டு பேர் கொண்ட கும்பல் ஓட ஒட விரட்டி சென்று சரமாரியாக வெட்டியுள்ளனர். 

23

ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை மீட்டு அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தனுஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இதையும் படிங்க;- அழகுக்கு ஏத்த மாதிரி ரேட்டு! மசாஜ் சென்டர் மஜாவாக நடந்த விபச்சாரம்.. தட்டித்தூக்கிய போலீஸ்.!

33

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தனுஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கூடுவாஞ்சேரி போலீசார் டூரிஸ்ட் வேன் உரிமையாளர் தனசேகர்(28) அவரது நண்பர் வினோத் (26) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் 17 வயது சிறுவன் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க;-  உங்களுக்கு சரக்கடிக்கிறதுக்கு இடமே கிடைக்கலையா? கண்டித்த பேக்கரி உரிமையாளர் படுகொலை! மனைவி கண்முன்னே பயங்கரம்!

click me!

Recommended Stories