உயிர் பிழைப்பாளா ரேவதி? பரமேஸ்வரி பாட்டி கொடுத்த வாக்கு - கார்த்திகை தீபம் 2 அப்டேட்!

Published : Sep 23, 2025, 06:08 PM IST

Karthigai Deepam 2: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், கார்த்திகை தீபம் 2 சீரியலில் குண்டடிப்பட்ட ரேவதி உயிர் பிழைப்பாரா? இல்லையா? என்பதை பார்ப்போம்.

PREV
14
காளியம்மாவிடம் தஞ்சம் அடையும் மாயா:

நேற்றைய கார்த்திகை தீபம் 2 சீரியல் எபிசோடில், கார்த்திக் மாயாவை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்த நிலையில், மாயா போலீசாரிடம் இருந்து தப்பிக்க காளியம்மா வீட்டிற்குள் வந்து ஒளிந்து கொள்கிறாள். மறுபக்கம் ரேவதிக்கு துப்பாக்கிசூடு நடந்த விஷயம் அறிந்து, பரமேஸ்வரி பாட்டி பதறியடித்து கொண்டு மருத்துவமனைக்கு ஓடி வருகிறாள். சந்திரகலா நீங்க எதுக்கு வந்தீங்க என்று தடுத்து நிறுத்த முயற்சி செய்கிறாள்.

24
சாமுண்டீஸ்வரியிடம் ஏற்பட்ட மாற்றம்:

ஆனால் சாமுண்டேஸ்வரி, யாரும் எதிர்பாராத விதமாக... விடு பார்த்துட்டு போகட்டும் என்று பரமேஸ்வரி பாட்டியை ரேவதியை பார்க்க அனுமதி கொடுக்கிறாள். ரேவதியின் நிலையை பார்த்து கண் கலங்கும், பாட்டி அங்கிருந்து கோவிலுக்கு கிளம்பி வருகிறாள்.

34
பரமேஸ்வரி பாட்டி செய்யும் தியாகம்:

அப்போது கடவுளிடம் எப்படியாவது, ரேவதியை காப்பாற்றி கொடுத்துவிடு முருகா என்று வேண்டுகிறாள். அப்போது கோவில் கட்ட நிலம் தேவைப்படுத்தாக பேச்சு கிளம்ப பாட்டி தேவையான நிலத்தை தருவதாக வாக்கு கொடுக்கிறார். அடுத்து அங்கு வந்த முருக பக்தர் ஒருவர் என்னமா ஆச்சு என்று விசாரிக்க, விபூதி கொடுக்க பாட்டி ICU-ல் கந்தசஷ்டி கவசம் பாடலை பாடி ரேவதிக்கு விபூதி பூசி விடுகிறாள்.

44
மாயா சிக்குவாளா?

தொடர்ந்து டாக்டர் ரேவதியை செக்கப் செய்து விட்டு உடனடியாக ஒரு ஆப்ரேஷன் செய்ய வேண்டும் என்று சொல்கிறார். இப்படியான நிலையில், அடுத்து நடக்கப்போவது என்ன மாயா சிக்குவாளா? என்பதை அறிய தொடர்ந்து கார்த்திகை தீபம் சீரியலை பாருங்கள்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories