இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற போவது இவரா?

First Published Nov 20, 2020, 7:21 PM IST

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது கிட்ட தட்ட 50 நாட்களை எட்ட உள்ளது. பிக்பாஸ் போட்டியாளர்கள் பாதி கிணற்றை தாண்டியது போல் தெரிந்தாலும், இனி தன் கடுமையான போட்டிகள் நடைபெற அதிக வாய்ப்புகள் உள்ளதாகவே கூறப்படுகிறது.
 

கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு யாரும் வெளியேற்றப்படாத நிலையில், இந்த வாரம் எவிக்ஷன் பட்டியலில் உள்ள, சோம், சம்யுக்தா, ரியோ ராஜ், அனிதா, ஆரி, சுசித்ரா மற்றும் பாலாஜி ஆகியோரில் யார் வெளியே செல்வார் என்கிற எதிர்பார்ப்பும் அதிக அளவு உள்ளது.
undefined
கடந்த வாரத்தை பொறுத்தவரை, சுசித்ரா தான் சரியாக விளையாட வில்லை என்பது போல் போட்டியாளர்கள் கூறி வருகிறார்கள். நாமினேஷன் படலத்தில் கூட சுசித்ரா தான் அதிக நபர்களால் நாமினேட் செய்யப்பட்டார்.
undefined
மேலும், இவர் உள்ளே வரும் போது மக்களுக்கு இருந்த பரபரப்பு தற்போது அப்படியே டவுன் ஆகிவிட்டது. எனவே இவர் தான் இந்த வாரம் குறைத்த வாக்குகள் பெற்று வெளியேறும் பிரபலமாக இருக்கலாம் என யூகிக்க படுகிறது.
undefined
ஆரி, ரியோ ராஜ், பாலாஜி ஆகியோர் சரியான இடத்தில் பேசி கன்டென்ட் கொடுத்து விளையாடுவதால் இவர்கள் வெளியே செல்ல வாய்ப்பில்லை.
undefined
மீதம் உள்ள சோம், சாம், அனிதா ஆகியோரும் பெரிதாக மக்கள் மத்தியில் எந்த ஒரு எதிர்ப்பையும் பெறாமல் விளையாடி வருவதால் அவர்களும் இந்த வாரம் சேஃப் ஆவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
undefined
எனவே இந்த வாரம், சுசி குறைவான வாக்குகள் பெற்று நான்காவது போட்டியாளராக வெளியேறுகிறாரா இல்லையா என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.
undefined
click me!