“என்அப்பா கூட தொடர்பில் இருந்தவங்க பரிசோதனை செஞ்சிக்கோங்க”... பிரபல நடிகரின் மகன் கோரிக்கை...!

First Published Aug 7, 2020, 2:41 PM IST

தமிழகத்தில் தீயாய் பரவும் கொரோனா தொற்றுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முதற்கொண்டு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ.வும், நடிகருமான கருணாஸ் குறித்து அவருடைய மகன் சோசியல் மீடியாவில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். 
 

சமீபத்தில் நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
undefined
முதலில் அவருடைய பாதுகாவலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது, இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கருணாஸுக்கும் தொற்று இருப்பது உறுதியானது.
undefined
இதையடுத்து திண்டுக்கல்லில் உள்ள தனது வீட்டில் கருணாஸ் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
undefined
இந்நிலையில் தனது தந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது குறித்து கருணாஸின் மகனும், அசுரன் படத்தில் தனுஷுன் இரண்டாவது மகனாகவும் நடித்த கென் கருணாஸ் சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.
undefined
அதில் எனது தந்தை அரசியல்வாதி என்பதால் கடந்த சில நாட்களாக தொகுதியில் உள்ள பல்வேறு இடங்களுக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
undefined
தற்போது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறும் அவருடைய உடல்நிலை சீராக உள்ளது. நாங்களும் பாதுகாப்பாக இருக்கிறோம்
undefined
அப்பாவின் உடல்நிலை குறித்து போன் மூலமாகவும், மெசேஜ் மூலமாகவும் தொடர்ந்து விசாரித்து வரும் உங்களுடைய அன்புக்கு நன்றி
undefined
கடந்த சில நாட்களாக அப்பாவுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள். தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். தயவு செய்து தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே செல்லாதீர்கள் என்று தெரிவித்துள்ளார்.
undefined
click me!