ஒரு கிராமம் முழுக்க திருமணமே செய்துகொள்ளாமல் வாழும் ஆண்கள்! தண்ணி பிரச்சனைக்காக இப்படி ஒரு முடிவா? ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்!

Published : Jun 11, 2026, 12:24 PM IST

உத்தரப்பிரதேச மாநிலம், மஹோபா மாவட்டத்தின் முத்ரா கிராமத்து இளைஞர்கள் ஏன் மணப்பெண் கிடைக்காமல் தவிக்கிறார்கள்? ஊரையே அதிரவைக்கும் இந்த அவலத்திற்குப் பின்னால் இருப்பது சாபமோ சடங்கோ அல்ல. மாறாக, குடிநீர் பிரச்சனைதான் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

PREV
13
தண்ணீர் தட்டுப்பாடும், திருமணத் தடையும்!

'நமாமி கங்கா' திட்டத்தின் கீழ், முத்ரா கிராமத்தில் குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு, பிரம்மாண்டமான தண்ணீர் தொட்டியும் கட்டப்பட்டுள்ளது. சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்த கட்டமைப்பு இருந்தாலும், அதிகாரிகளின் சோதனையின் போது வந்த தண்ணீரைத் தவிர, அதன் பிறகு குழாய்களில் தண்ணீர் வரவே இல்லை என கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். சுமார் 2,000 மக்கள் வசிக்கும் இந்த கிராமம், இன்றும் தண்ணீருக்காக ஒரு சில கை பம்புகளையே நம்பியுள்ளது.

இந்த தண்ணீர் பற்றாக்குறை வெறும் தாகத்தைத் தீர்க்கும் பிரச்சனையாக மட்டும் இருக்கவில்லை; அது ஒரு சமூகச் சிக்கலாகவும் உருவெடுத்துள்ளது. கிராமத்தில் திருமண வயதை எட்டிய சுமார் 40 இளைஞர்கள் உள்ளனர். ஆனால், தண்ணீர் வசதி இல்லாத கிராமம் என்பதால், தங்கள் மகள்களை இங்கு மணம் முடித்துக் கொடுக்க எந்தப் பெற்றோரும் முன்வருவதில்லை.

"எங்கள் கிராமத்திற்கு வந்தால், எங்கள் மகள் தினமும் எவ்வளவு தூரம் தண்ணீர் சுமக்க வேண்டும்?" என்ற கேள்விதான், சம்பந்தம் பேச வருபவர்களின் முதல் கேள்வியாக உள்ளது. இதனால், பல இளைஞர்களின் திருமணம் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது.

23
தண்ணீருக்காகவே போராடும் வாழ்க்கை

கிராமத்தில் உள்ள மூன்று கை பம்புகளில் இரண்டில் உப்பு நீர் வருவதால், கிராமத்திற்கு வெளியே உள்ள ஒரே ஒரு கை பம்பைத்தான் அனைவரும் நம்பியுள்ளனர். காலை நேரமே தண்ணீருக்கான போராட்டத்தில்தான் தொடங்குகிறது. பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் என அனைவரும் மணிக்கணக்கில் வரிசையில் காத்திருந்து தண்ணீர் பிடிக்கும் சூழல் நிலவுகிறது.

திருமணம் போன்ற விசேஷங்கள் நடந்தால், விருந்தினர்களுக்காக விலைகொடுத்து டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வரவழைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இது ஏழை எளிய மக்களுக்கெல்லாம் பெரும் பொருளாதாரச் சுமையை ஏற்படுத்துகிறது.

இதையும் படிங்க : கணவர் இல்லாமல் வாழும் தமிழ்ப் பெண்கள் : இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் டாப்! அதிர்ச்சியூட்டும் உண்மை!

33
அதிகாரிகளின் அலட்சியம்

தேர்தல் காலங்களில் வாக்குறுதிகளை அள்ளி வீசும் மக்கள் பிரதிநிதிகள், வெற்றி பெற்ற பிறகு கிராமத்தின் பக்கம் திரும்புவதே இல்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். காகிதத்தில் முத்ரா கிராமம் அனைத்து வசதிகளையும் கொண்ட கிராமமாக இருக்கலாம், ஆனால் நிஜத்தில் மக்கள் இன்றும் வெயிலில் வாடியபடி தண்ணீர் குடங்களுடன் வரிசையில் நிற்கிறார்கள்.

"நாங்கள் ஒன்றும் பிரம்மாண்டமான வசதிகளைக் கேட்கவில்லை, குடிக்க ஒரு சொட்டு தண்ணீர் மட்டும்தான் கேட்கிறோம்," என அந்த கிராம மக்கள் கதறுகின்றனர். இந்த அவல நிலை மாற, அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க : இந்த ராசிகளைச் சேர்ந்த பெண்களை காதலிக்கும் ஆண்கள் கொஞ்சம் கவனமாக இருங்கள்! ஏன் தெரியுமா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories