விமர்சனம்:
சமீப காலமாக அதிரடி ஆக்ஷன் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கின்றன. மாஸ் கமர்ஷியல் அம்சங்களை சேர்த்து இன்ட்ரஸ்டிங்காக, எங்கேஜிங்காக, ட்விஸ்ட், டர்ன், எலிவேஷன்களுடன் திரைக்கு கொண்டு வந்தால் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் படமும் லேட்டஸ்டாக இணைந்துள்ளது. இந்த படம் சில நேரங்களில் கார்த்தி `கைதி`யை நினைவூட்டுகிறது.
ஒரு நாள் இரவில் நடக்கும் கதை. ஒரே இரவில் போலீசார் பெரியவர் மற்றும் அவர் மகன் கண்ணனை கொல்ல பிளான் செய்ய, எஸ்பியை கொல்ல பெரியவரும் கண்ணனும் திட்டமிடுகிறார்கள். இரவிலேயே கதையை முடிக்க புறப்படுகிறான் காளி. இவர்கள் போடும் ஸ்கெட்சுகளின் தொகுப்பு, ஒருவரிடம் இருந்து ஒருவர் தப்பிக்க செய்யும் முயற்சிகள், அவர்களை கொன்றுவிட காளி படும் கஷ்டம் இந்த வரிசையில் நடக்கும் சம்பவங்களே இந்த படத்தின் கதை.
ஒரே இரவில் நடக்கும் கதை என்பதால் இதில் திரைக்கதை தான் முக்கிய பங்காற்றி உள்ளது. அதை திறம்பட கையாண்டுள்ளார் இயக்குனர் அருண் குமார். எதிர்பாரா ட்விஸ்டுகள் படத்திற்கு விறுவிறுப்பை கூட்டி உள்ளன. ஒரு சில இடங்களில் லாஜிக் மிஸ்டேக் இருக்கிறது அதை தவிர்த்திருக்கலாம். அதேபோல் பிளாஷ்பேக் காட்சிகள் சற்று டல் அடிக்கிறது. மற்றபடி இந்த வீர தீர சூரன் தூள் கிளப்பி இருக்கிறான்.