நாயகி அஞ்சலி நாயர், இயல்பான நடிப்பாலும், அழகாலும் கவர்கிறார். ஹீரோவுக்கு அடுத்து படத்தில் முக்கியத்தும் உள்ள கதாபாத்திரம் என்றால் அது நடிகர் லால் உடையது தான். கம்பீரமான நடை, மிடுக்கான தோற்றத்துடன் வரும் அவர் ஆணவம் மிகுந்த அதிகாரியாக மிரட்டி இருக்கிறார். அவரை பார்த்தால் நமக்கே பயம் வந்துவிடும் போல, அந்த அளவுக்கு வில்லத்தனத்தை காட்டி கைதட்டல்களை பெற்றுள்ளார்.