ரோகிணியின் முன்னாள் கணவர் மற்றும் அவர்களது மகன் கிரிஷ் குறித்த உண்மை, எதிர்பாராத விதமாக மீனாவுக்கு தெரிய வருகிறது. இந்த தகவல், அவளது மனதை மட்டுமல்லாமல், இரு குடும்பங்களுக்கிடையேயான உறவுகளையும் பாதிக்கும் வகையில் இருப்பதால்... இதனை வேறு யாரிடமும் சொல்ல முடியாமல், தனக்குள் தாங்கிக் கொண்டு மீனா தவித்து வருகிறார். உண்மையை சொன்னால் குடும்பத்தில் பிரச்சனை வரும், சொல்லாமல் இருப்பதால் அவளின் மனசாட்சியே அவளை துன்புறுத்துகிறது. இதன் காரணமாகவே மீனா கதாபாத்திரம் சோகத்தில் இருப்பது போலவே காட்டப்பட்டு வருகிறது.