38 வயதில் நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்ட விஜய் டிவி சீரியல் நடிகை சந்திரா! வைரலாகும் வெட்டிங் போட்டோஸ்

First Published Nov 12, 2021, 7:33 PM IST

மலையாள சீரியல் நடிகையான சந்திரா பல தமிழ் சீரியல்களிலும் படங்களிலும் நடித்து பிரபலமானவர். தற்போது தன்னுடைய 38 வயதில் தன்னுடன் நடித்த சீரியல் நடிகரை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார். தற்போது இவரது திருமண புகைப்படங்கள் வெளியாக ரசிகர்கள் பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

மலையாள ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கும் சந்திரா 'மனசெல்லாம்' என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர்.

ஆனால் இவருக்கு திரைப்படங்கள் கை கொடுக்கவில்லை. எனவே தனக்கு பொருத்தமான கதாபாத்திரங்களை சீரியல்களில் சூஸ் பண்ணி நடிக்க துவங்கினார்.

அந்த வங்கியில் இவர் விஜய் டிவியில் கடந்த 2007-ல் ஒளிபரப்பாகி காதலர்களை வெகுவாக கவர்ந்த சீரியல் தான், "காதலிக்க நேரமில்லை". இதில் கதாநாயகியாக நடித்தான் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக ப்ரஜின் நடித்திருந்தார்.

இதையடுத்து பல தமிழ் மற்றும் மலையாள சீரியல்களில் நடித்து வந்த  38 வயதாகும் இவர் தற்போது 'ஸ்வந்தம் சுஜாதா' என்ற மலையாள சீரியலில் நடித்து வருகிறார்.

35 வயதை கடந்து விட்ட இவரிடம் சமீபத்தில் ரசிகர்கள் எப்பதுமே திருமணம் என்று எழுப்பிய கேள்விக்கு  தன்னுடைய காதலரை சமூக வலைத்தளத்தில் அறிமுகம் செய்து, விரைவில் திருமணம் நடைபெறும் என தெரிவித்திருந்தார்.

தன்னுடன் கூடவே நடித்த சக நடிகரான, டோஷ் கிரிஸ்டி என்பவரை காதலித்த சான்றவிக்கும் இவரது காதலருக்கும் இன்று கேரளாவில் மிக சிறப்பாக திருமணம் நடந்துள்ளது.

இவர்களது திருமணத்தில் இரு தரப்பு நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு இவர்களை வாழ்த்தியுள்ளனர்.

நடிகை சந்திரா லட்சுமணன் திருமண புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை இவருக்கு தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!