விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களுமே டாப் ரேட்டிங்கில் போய்க் கொண்டிருக்கிறது. காதல், கல்யாணம், அண்ணன் - தம்பி பாசம் என விதவிதமாக சீரியல்கள் வரிசை கட்டி ஒளிபரப்பாகி வருகிறது.
undefined
அதிலும் குறிப்பாக படங்களின் பெயர்களை தலைப்பாக கொண்டு வெளியாகும் ராஜா ராணி, சின்னத் தம்பி, நாம் இருவர் நமக்கிருவார், ஆயுத எழுத்து, மௌன ராகம், பாரதி கண்ணம்மா ஆகிய சீரியல்கள் ரசிகர்கள் மனதில் நச்சென பதிந்துவிடுகிறது. அந்த வரிசையில் தற்போது காற்றின் மொழி சீரியல் இடம் பிடித்திருந்தது.
undefined
இந்த தொடரில் ராஜா ராணி புகழ் சஞ்சீவ் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த தொடரில் கண்மணி என்ற கிராமத்து கதாபாத்திரத்தில் ஹீரோயினாக பிரியங்கா ஜெயின் நடித்து வருகிறார்.
undefined
கடந்த அக்டோபர் மாதம் முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் அதிரடி திருப்பங்கள், காதல், பேமிலி சென்டிமெண்ட் என அனைத்தின் கலவையாக சென்று கொண்டிருக்கிறது.
undefined
இப்போது சீரியலில் நாயகன்-நாயகி திருமணம் குறித்த கதைக்களம் தான் ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் இயக்குனர் என்னென்ன திருப்பங்கள் வைத்துள்ளார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இந்நிலையில் காற்றின் மொழி சீரியல் விரைவில் முடிய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
undefined
இந்த செய்தியைக் கேள்விப்பட்டு இல்லத்தரசிகள் அதிர்ச்சியில் உறைந்திருக்கும் நிலையில், வரும் ஏப்ரல் 9ம் தேதியுடன் இந்த சீரியல் முடிவுக்கு வர உள்ளதாக அடுத்த குண்டை தூக்கிப் போட்டுள்ளனர். இதனால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
undefined