இவர் இரண்டு வேலை செய்து வருகிறார். காலையில் கால் டாக்ஸி டிரைவராகவும், இரவில் பப்பில் பவுன்சராகவும் வேலை பார்த்து வருகிறார். இந்த சமயத்தில் கால் டாக்ஸி ஓட்டும் போது நயன்தாரா உடன் பழக்கம் ஏற்படுகிறது. இது நாளடைவில் காதலாக மாறுகிறது. அதேபோல் பவுன்சராக வேலை பார்க்கும் போது பப்பில் சமந்தா மீது காதல் வயப்படுகிறார்.
இதில் இருவரையும் காதலித்து வரும் விஜய் சேதுபதி இறுதியில் யாரை திருமணம் செய்தார்? துரதிர்ஷ்டசாலியாக இருந்தவர் அதிர்ஷ்டசாலியாக மாறினாரா? இல்லையா? என்பதை நகைச்சுவையுடன் சொல்லி உள்ள படம் தான் காத்துவாக்குல ரெண்டு காதல்.