விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர், கடந்த 1981 ஆம் ஆண்டு வெளியான 'சட்டம் ஒரு இருட்டறை' என்கிற படத்தின் மூலம் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து சுமார் 50க்கும் மேற்பட்ட படங்களை தற்போது வரை இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் என்பதையும் தாண்டி, தயாரிப்பாளர், எழுத்தாளர், என பன்முக திறமைகளோடு விளங்கி வருகிறார்.