Vignesh shivan : விக்னேஷ் சிவனுக்கு மறுபடியும் கல்யாணமா..! பகீர் கிளப்பிய பெரியப்பா

First Published Jun 10, 2022, 1:15 PM IST

Vignesh shivan : மகனைப் போல் வளர்த்த எங்களிடம் கலந்து ஆலோசிக்காமல் திருமணம் வைத்தது சற்று மனவருத்தமாக உள்ளது என விக்னேஷ் சிவனின் பெரியப்பா கூறி உள்ளார்.

விக்னேஷ் சிவன் - நயன் தாரா ஜோடியின் காதல் திருமணம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இந்து முறைப்படி நடைபெற்ற இந்த திருமணத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், ஷாருக்கான், சூர்யா, விஜய் சேதுபதி, ஜெயம் ரவி, சரத்குமார், கார்த்தி, விக்ரம் பிரபு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டவர்.

இவ்வளவு பிரம்மாண்டமாக திருமணம் நடத்தியும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது உறவினர்களை இந்த திருமணத்துக்கு அழைக்கவில்லை என்கிற தகவல் நேற்று வெளியாகி பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், தற்போது திருச்சியை அடுத்த லால்குடியில் வசிக்கும் விக்னேஷ் சிவனின் பெரியப்பா இதுகுறித்து அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.

இதுகுறித்து விக்னேஷ் சிவனின் பெரியப்பா மாணிக்கம் கூறி உள்ளதாவது: எனது தம்பி மகன் தான் விக்னேஷ் சிவன். எங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாததால் விக்னேஷ் சிவனையும் அவரது தங்கை ஐஸ்வர்யாவையும் எனது சொந்த பிள்ளைகள் போல் வளர்த்து வந்தேன். சிறுவயதில் பள்ளி விடுமுறை நாட்களில் என வீட்டில் தான் இருப்பார் விக்னேஷ் சிவன்.

அவரது தந்தை இறந்த பிறகு சென்னை சென்ற அவர்கள் அதன்பின் எங்கள் யாரிடமும் தொடர்பு வைத்துக்கொண்டதில்லை. மகனைப் போல் வளர்த்த எங்களிடம் கலந்து ஆலோசிக்காமல் திருமணம் வைத்தது சற்று மனவருத்தமாக உள்ளது. அவரது திருமணம் காலை 9 - 10:30 மணிக்குள் நடந்துள்ளது. அது குளிகை நேரம், அந்த நேரத்தில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் அது திரும்பத் திரும்ப நடக்கும் என்பது ஐதிகம்” என தெரிவித்துள்ளார்.  

இதையும் படியுங்கள்.... விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் திருமண செலவு மட்டும் இத்தனை கோடியா...! லீக்கான தகவல்... ஷாக் ஆன ரசிகர்கள்

click me!