குடிபோதையில் பீட்டர் பால் நிறைய தப்பு பண்ணாரு... கண்ணீர் விட்டு கதறிய வனிதா... !

First Published Oct 21, 2020, 2:29 PM IST

கோவாவில் சரக்கு போதையில் தகராறு செய்த பீட்டர் பாலை வனிதா அடித்து விரட்டிவிட்டதாக கூறப்படும் நிலையில், அன்று நடந்தது என்ன என அவரே வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் கொடுத்துள்ளார்.

பல சர்ச்சைகள், பிரச்சனைகளுக்குப் பிறகு வாழ ஆரம்பித்த வனிதாவும், பீட்டர் பாலும் பிரிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. கோவாவில் வனிதாவிடம் பீட்டர் பால் குடித்துவிட்டு தகராறு செய்ததாகவும், இதனால் பீட்டர் பாலை வனிதா அடித்து விரட்டிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனிடையே நேற்று வனிதா தனது ட்விட்டர் பக்கத்தில் பீட்டர் பாலை பிரிந்துவிட்டதை உருக்கமாக அறிவித்தார்.
undefined
இந்நிலையில் பீட்டர் பாலை திருமணம் செய்ய ஒப்புக்கொண்டது முதல் தற்போது தோற்றுபோய் பிரிந்து சென்றது வரை என்ன நடந்து என வனிதா தனது யூ-டியூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
undefined
அதில், “பீட்டர் பால் உடல் ரீதியாக பாதிக்கப்பட்டார்.மாரடைப்பு வந்ததால், நான் பேரதிர்ச்சி அடைந்தேன்.. அதிர்ஷ்டவசமாக காப்பாற்றினேன். மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வந்தோம். மறுபடியும் சில நாளில் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. எனக்கு ஒரு துணை வேண்டும் என்று உங்களை திருமணம் செய்தேனே தவிர, உங்கள் இறப்பை காண அல்ல என்று அவரிடம் பேசினேன்.
undefined
அவரை ட்ராக் செய்ததில், அவரை கையும் களவுமாக பிடித்தேன். அவர் சிகரெட்டுக்கு அடிமையாகியிருந்ததால், அதை விட வற்புறுத்தினேன். அதன் பிறகுதான் கோவா சென்றோம். பீட்டரின் சகோதரருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட செய்தி வந்ததால், அதை காரணம் காட்டி மது குடித்தார். இந்த பழக்கம் எத்தனை நாளுக்கு பிறகு மீண்டும் தொடங்கியது என்று தெரியவில்லை.
undefined
இதனால் எங்கள் இருவருக்கும் சண்டை வந்தது. ஏற்கெனவே பலவீனமாக உள்ள அவர் குடித்திருப்பது எனக்கு கவலை அளித்தது. சரி. எப்படியோ வீட்டுக்கு வந்துவிட்டோம். அன்றையிலிருந்து ஒருவாரம் தொடர்ந்து குடித்துள்ளார்.
undefined
மீண்டும் மீண்டும் கூட்டி வந்துவிட்டால்... குடிக்க ஓடிவிடுவார். இன்னமும் போன் ஸ்விட்ச் ஆப்லேயே வைத்துள்ளார். அவர் எங்கிருக்கார் என்று தெரியவில்லை.
undefined
போதை பழக்கம்தான் அவருக்கு அதிகம் உள்ளதால், எனக்கு கவலை அளிக்கிறது. என் சொந்த பணத்தில்தான் என் குழந்தைகளையும், பீட்டர்பாலையும் காப்பாத்திட்டுருக்கேன். என் வாழ்நாளில் நான் ஏமாந்தது அன்பினால்தான். குடிப்போதையால பீட்டர்பால் ரொம்ப தப்பு பண்றாரு. ஏமாந்துட்டேன்.. தோற்றுவிட்டேன்.. காதல், திருமணம் எனக்கு அமையவில்லை என கண்ணீர் மல்க பேசியுள்ளார்.
undefined
click me!