இதுநாள் வரை, அண்ணா அண்ணா என அவரை சுற்றி வந்து ரொம்ப மரியாதையான பெண்ணாக இருந்த, சனம் ஷெட்டியின் சுய ரூபம் இந்த டாஸ்க் மூலம் வெளியே வர துவங்கியுள்ளதாகவே, இன்றைய எபிசோடு இருக்கும் என தெரிகிறது.
undefined
அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள புரோமோவில், சொர்கபுரியை சேர்ந்த ஆஜித் தன்னுடைய நாட்டை காப்பாற்ற காட்டுக்கு செல்கிறார்.
undefined
அவரை சூழ்ந்துகொண்டு அரக்கர்கள் அவர் மீது ஸ்ப்ரே அடித்து தொந்தரவு செய்கிறார்கள். இதை பார்த்த சுரேஷ் ஸ்ப்ரே அடிக்கிற பிசாசு என கோவத்தில் கத்துகிறார்.
undefined
ஆஜித்தை தொந்தரவு செய்வதை ராஜ குடும்பத்தை சேர்ந்தவர்கள் பார்க்க கூடாது என, கருப்பு நிற திரை ஒன்றும் கட்டப்படுகிறது. பின்னர் சுரேஷ் எதையோ வைத்து சனத்தில் கையில் தாக்கியபோது அது அவரது நெற்றியில் படுகிறது.
undefined
இதனால் கோவமானம் சனம், கொஞ்சம் இருந்தால் தன்னுடைய கண்கள் போய் இருக்கும் என கத்துகிறார்.
undefined
சனத்திற்கு ஆதரவாக பாலாஜியும், சுரேஷை பார்த்து அறிவே இல்லையா என கேட்கிறார்.
undefined
மேலும் சனம் சுரேஷ் சக்ரவர்த்தியின் வயதை கூட கருத்தில் கொள்ளாமல் ஹேய் நீ வெளில வாடா இப்போ என கூறுகிறார். பின்னர் சுரேஷ் நீங்கள் செய்யலாம் நாங்கள் செய்ய கூடாதா? என கேட்கிறார்.
undefined
அப்போது சனம் எனக்கும் மனசு இருக்கு என சினிமா டயலொக் போல் கூற... சுரேஷ் சக்கரவர்த்தி சிரிக்கிறார். என்னதான் இன்னைக்கு நடக்கும் என பொறுத்திருந்து பார்ப்போம்.
undefined