மீண்டும் கம்பேக் கொடுக்க தயாரான வடிவேலு..! 2 சூப்பர் டூப்பர் கேரக்டர்... இனி சிரிப்பு மழை தான்..!

First Published Jul 7, 2020, 7:41 PM IST

தமிழ் சினிமாவில் பல காமெடி நடிகர்கள் இருந்தாலும், வடிவேலுவை அடித்து கொள்ள முடியாது. அந்த அளவிற்கு தன்னுடைய பாடி லாங்குவேஜ் மூலம் நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் சிரிக்க வைத்தவர். இவர் மீண்டும் இரண்டு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

நடிகர் வடிவேலு, கடைசியாக கடந்த 2017 ஆம் ஆண்டு, இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வெளியனான மெர்சல் படத்தில் நடித்திருந்தார்.
undefined
இதை தொடர்ந்து, இவர் ஃபிரெண்ட்ஸ் படத்தில் நடித்த நேசமணி மீம்ஸ் வைரலான போது, தனக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க கூடாது என சதி நடப்பதாகவும் எனவே, வெள்ளித்திரை இல்லை என்றால், நெட்ப்ளிஸ் போன்ற சமூக வலைதள தொடர்களில் நடிக்க அழைப்பு வருவதாக கூறி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
undefined
இவருடைய காமெடி வாழ்க்கை கலகப்பாக சென்று கொண்டிருந்த நேரத்தில், இவருடைய திரையுலக பயணத்தில் முதலில் மாற்றத்தை ஏற்படுத்தியது, கடந்த 2006 ஆம் ஆண்டு, இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில் இவர், ஹீரோவாக நடித்து வெளியான '23 ஆம் புலிகேசி' படம் தான். முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட்டாகி, முன்னணி நடிகர்கள் படங்களுக்கு நிகராக ஓடி வசூல் சாதனை படைத்தது.
undefined
இந்த படத்தின் வெற்றிக்கு பின், காமெடி வேடத்தில் நடிக்க வந்த வாய்ப்புகளை ஏற்க மறுத்த வடிவேலு, தொடர்ந்து ஹீரோவாகவே நடிக்க ஆர்வம் காட்டினார். அந்த வரிசையில் வெளியான. தெனாலிராமன், எலி போன்ற படங்கள் படு தோல்வியை சந்தித்தது.
undefined
சரிந்து விழுந்த மார்க்கெட்டை மீண்டும் நிலை நிறுத்த, மீண்டும் இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில், இயக்குனர் ஷங்கர் தயாரிக்க இருந்த '24 ஆம் புலிகேசி' படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். ஆனால் சில பிரச்சனைகள் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பில் இவர் சரியாக கலந்து கொள்ள முடியவில்லை. தயாரிப்பாளர் தரப்பில் இருந்து ஏகப்பட்ட நஷ்டம் ஏற்பட்டதாக தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்கப்பட்டது. வடிவேலு உரிய பதில் கொடுக்காததால், இவர் திரைப்படங்களில் நடிக்க ரெட் கார்டு போடப்பட்டது.
undefined
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மீண்டும் நடிகர் வடிவேலு நடிக்க உள்ள படங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகிறது. கமலஹாசனுடனு 'தலைவன் இருக்கிறான்' படத்தின் ஒரு பகுதியாக இவர் இருப்பதாக ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் விஜய் சேதுபதியும் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.
undefined
இதை தொடர்ந்து, சுந்தர்.சி இயக்கத்தில் உருவாக உள்ள 'தலைநகரம்' படத்தில் நாய் சேகராக நடிக்க உள்ளார் வடிவேலு.
undefined
இந்நிலையில் இவர் நடிக்க உள்ள புதிய படம் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. இயக்குனர் சூரஜ் இயக்கும் ஒரு புதிய திரைப்படத்தில் வடிவேலு நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் மருதமலை படத்தில் நடித்த ஏட்டு ஏகாம்பரம் போன்ற கதாப்பாத்திரத்தில் வடிவேலு கம்பேக் கொடுக்க உள்ளாராம். இந்த தகவல் இவரது ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. இது போன்ற வேடங்களில் மீண்டும் வடிவேலு நடித்தால் கண்டிப்பாக சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது.
undefined
click me!