மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் ரஜினிகாந்த்... இன்று மீண்டும் கொரோனா பரிசோதனை...!

First Published Dec 24, 2020, 1:37 PM IST

சூப்பர் ஸ்டாருக்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நெகட்டீவ் என ரிசல்ட் வந்தது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. 

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் கொரோனா பிரச்சனை காரணமாக நிறுத்தப்பட்டிருந்தது. ஜனவரி மாதம் முதல் ரஜினி தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதால் அண்ணாத்த படத்தை முடித்துக் கொண்ட தீர்மானித்தார்.
undefined
இதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் தனிவிமானம் மூலமாக சென்னை டூ ஐதராபாத் பறந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. படவேலைகளை விரைவில் முடிக்க தீர்மானித்த ரஜினி தினமும் 14 மணி நேரம் நடித்து வந்தார்.
undefined
இந்நிலையில் படக்குழுவை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து உடனே படப்பிடிப்பை நிறுத்திவிட்டனர்.
undefined
இதையடுத்து சூப்பர் ஸ்டாருக்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நெகட்டீவ் என ரிசல்ட் வந்தது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
undefined
ரஜினிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதால், சென்னையில் இருந்து சென்றுள்ள மருத்துவர்கள் குழு அவரை தீவிரமாக கண்காணித்து வருகிறார்களாம்.
undefined
இன்று மீண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு பிவிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாம். தற்போது ரஜினிகாந்த் ஐதராபாத்தில் தன்னைத் தானே தனிமைப்படுத்துக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
undefined
click me!