நிஷாவை ஜெயிலுக்கு அனுப்பி...வெளியே செல்ல உள்ளவர்களையும் தெரிவித்த கமல்..!

First Published Dec 12, 2020, 8:14 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் இரண்டு பேர் வெளியேற உள்ளதை ஏற்கனவே அறிவித்தார் உலகநாயகன் கமல்ஹாசன்.
 

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது புரோமோவில், பிக்பாஸ் வீட்டுக்கு குட்பை சொல்ல உள்ள நபர் யார் என்பது தெரியப்படுத்தும் விதத்தில் உள்ளது.
undefined
மூன்றாவது புரமோவில் நாமினேஷன் பட்டியலில் உள்ள ரமேஷை கன்பெக்சன் அறைக்கும், சோம்சேகரை ஸ்டோர் ரூமுக்கும் செல்லுமாறு கமல் கூறுகிறார்.
undefined
இவர்கள் இருவரில் ஒருவர் இன்று வெளியேற்றப்படுவார் என்றும், வெளியேற்றப்படும் நபர் இங்கே என்னை நேரடியாக வந்து சந்திப்பார் என்றும் கமல் கூறுகிறார்.
undefined
இதனை அடுத்து இன்று வெளியேறும் நபர் சக போட்டியாளர்களிடம் விடை பெற்றுக் கொள்ளக் கூட அனுமதிக்கப்படாமல் அப்படியே கமல்ஹாசனை சந்திக்க வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
undefined
இன்று குறைவான வாக்குகளுடன் ஜித்தன் ரமேஷ் தான் வெளியேற உள்ளதாக ஏற்கனவே சில தகவல்கள் கசிந்துள்ளதால், கிட்ட தட்ட அது உறுதியாகியுள்ளது.
undefined
அதே போல், மோசமான போட்டியாளர் என அனிதாவை தேர்வு செய்து போட்டியாளர்கள் ஜெயிலுக்கு அனுப்பினார்கள், ஆனால் தற்போது மீண்டும் கமல் முன் மோசமான போட்டியாளர் யார் என கணக்கெடுப்பு நடத்தியதில், நிஷா தேர்வு செய்யப்பட்டு அவரை ரியோ ஜெயிலில் அடைகிறார்.
undefined
மொத்தத்தில் இன்று அர்ச்சனாவின் அன்பு குரூப்பை கமல் முழுக்க முழுக்க வெளுத்து வாங்கியுள்ளார் என்பது இந்த புரோமோவில் இருந்து தெரியவந்துள்ளது.
undefined
click me!