சுவாதி சதீஷின் தற்போதைய நிலை அவரது கேரியரில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வர நடித்துள்ள படம் ஒன்று ரிலீஸுக்கு காத்திருக்கிறது. இருப்பினும், நடிகர் தனது உடல்நிலை காரணமாக பொது வெளியில் சென்று தனது படத்தை விளம்பரப்படுத்த முடியவில்லை. சுவாதி இப்போது முகத்தில் வீங்கிய நிலையில் வேறு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் முகம் வீங்கியதற்கான ரிசன் தெரியவந்துள்ளது. மருத்துவ பரிசோதனையில் சுவாதிக்கு மயக்க ஊசிக்கு பதிலாக முகத்தில் உள்ள முகப் பருவை குணப்படுத்த பயன்படுத்தக் கூடிய சாலிசிலிக் ஆசிட்டை (Salicylic Acid) மருத்துவர் செலுத்தியுள்ளது தெரியவந்தது. இது தோலில் ஊடுருவி சென்று முகப் பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாவை அழிக்கும். அது போல் தோலில் அதிக எண்ணெய் உற்பத்தியை குறைக்கும். தோலில் உள்ள துளைகள் எப்போதும் திறந்திருக்க உதவும். இந்த தகவலி அடுத்து அந்த மருத்துவர் மீது ஸ்வாதி புகார் அளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.