இளம் நடிகர் சுதீர் வர்மாவின் தற்கொலைக்கு காரணம் என்ன? விசாரணையில் வெளிவந்த திடுக் தகவல்

Published : Jan 24, 2023, 01:22 PM IST

வீட்டில் தூக்கில் தொங்கியபடி பிணமாக மீட்கப்பட்ட சுதீர் வர்மா, எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

PREV
14
இளம் நடிகர் சுதீர் வர்மாவின் தற்கொலைக்கு காரணம் என்ன? விசாரணையில் வெளிவந்த திடுக் தகவல்

சினிமா பிரபலங்களின் தற்கொலை எப்போதுமே சர்ச்சைகள் நிறைந்ததாகவே இருந்து வருகிறது. பாலிவுட்டில் கடந்த 2020-ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்ட நடிகர் சுஷாந்த் சிங்கின் தற்கொலைக்கு இன்றளவும் யார் காரணம் என்பது புரியாத புதிராக உள்ளது. அதேபோல் தமிழ் நாட்டில் சின்னத்திர சீரியல் நடிகை சித்ராவின் தற்கொலைக்கும் என்ன காரணம் என்பது இதுவரை உறுதியாக தெரியவில்லை.

24

அந்த வகையில் பிரபல தெலுங்கு நடிகர் சுதீர் வர்மா என்பவர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 33 வயதாகும் இவர் தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகராக இருந்து வந்தார். விசாகப்பட்டினத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கியபடி பிணமாக மீட்கப்பட்ட சுதீர் வர்மா, எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதையும் படியுங்கள்... Sudheer Varma Suicide: திரையுலகில் பரபரப்பு... பிரபல இளம் நடிகர் தூக்கிட்டு தற்கொலை!

34

முதற்கட்ட விசாரணையில் அவருக்கு சமீப காலமாக சினிமா வாய்ப்புகள் சரிவர கிடைக்காமல் இருந்து வந்ததாகவும், நல்ல வாய்ப்புகளுக்காக சில காலம் போராடியும் எதுவும் கிடைக்காததால் மன உளைச்சலில் இந்த தற்கொலை முடிவை அவர் எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து அவருடன் பணியாற்றியவர்களிடமும் விசரணை நடத்தப்பட்டு வருகிறது.

44

சுதீர் வர்மாவின் மறைவு தெலுங்கு திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அவரது மறைவுக்கு ஏராளமான பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதேபோல் அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். சுதீர் வர்மாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... பீஸ்ட் ஞாபகம் வந்திருச்சோ...! நைசாக ஏப்ரல் வெளியீட்டில் இருந்து பின்வாங்கும் ரஜினிகாந்தின் ஜெயிலர்?

click me!

Recommended Stories