அவர் பயணித்தது விலை உயர்ந்த ரேஞ்ச் ரோவர் கார் என்பதால், பாதுகாப்பு அம்சங்கள் சிறப்பாக செயல்பட்டதாகவும், அதனால் தான் அவர் பெரியளவில் காயங்கள் இன்றி தப்பித்ததாக கூறப்படுகிறது. எனினும், இந்த விபத்து குறித்து காவல்துறையோ, குடும்பத்தினரோ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. எது எப்படியோ சர்வானந்த் சிறு காயங்களுடன் உயிர் தப்பியதால் அவரது குடும்பத்தினர் நிம்மதி அடைந்துள்ளனர்.