சுஷாந்தின் 6 வருட காதலிக்கு நடந்த முடிந்த நிச்சயதார்த்தம்! தற்கொலைக்கு பின் வெளியாகும் ஷாக் தகவல்!

First Published Jun 15, 2020, 12:28 PM IST

தோனி பட நடிகர், சுஷாந்த் சிங் தற்கொலை ஒட்டு மொத்த திரையுலகினரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இவருடைய தற்கொலைக்கு காரணம் மன அழுத்தம் என கூறப்பட்டு வரும் நிலையில், இவர் 6 வருடம் உயிருக்கு உயிராக காதலித்த நடிகை அங்கிதா லோகண்டே நினைவாக  கூட இவர் மன அழுத்தத்திற்கு ஆளாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.
 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாறான MS Dhoni untold Story என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இந்தியாவின் பட்டி, தொட்டி எல்லாம் புகழ் பெற்றவர் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். 34 வயதான இவர் மும்பை பாந்த்ராவில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
undefined
ஒட்டுமொத்த திரையுலகையே அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. சுஷாந்த் கடைசியாக நடித்துள்ள Chhichhore படம் தற்கொலைக்கு எதிராக போராடி வெல்வது பற்றியது. இப்படிப்பட்ட படத்தில் நடித்து ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்த சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
undefined
இந்நிலையில் சுஷாந்தின் தற்கொலைக்கு மன அழுத்தம் தான் முக்கிய காரணம் என சொல்லப்படும் நிலையில், இவர் காதலித்து பிரிந்த நடிகை அங்கிதாவிற்கு கடந்த வாரம் தான் வேறு ஒருவருடன் திருமண நிச்சயதார்த்தம் முடிந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
undefined
கடந்த 2009 ஆம் ஆண்டு, நடிகர் சுஷாந்த் சிங் நடிகை அங்கிதா லோகண்டேவுடன் 'பவித்ரா ரிஷ்ட்டா' என்கிற சீரியலில் நடித்த போது, அங்கீதாவை காதலிக்க துவங்கினார்.
undefined
6 வருடம் உயிர்க்கு உயிராக காதலித்து வந்த இவர்கள், கடந்த 2016 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக தங்களுடைய உறவை முறித்து கொண்டனர்.
undefined
இதை தொடர்ந்து சுஷாந்த் தன்னுடைய முழு கவனத்தையும் திரைப்படங்கள் நடிப்பதில் செலுத்தினர். அங்கிதா விக்கி ஜெயின் என்பவரை காதலிக்க துவங்கினார்.
undefined
இந்நிலையில் இவர்களுடைய திருமண நிச்சயதார்த்தம், கடந்த வாரம் நடந்த முடிந்துள்ளது. எனவே அடிக்கடி, தன்னுடைய வருங்கால கணவருடன் எடுக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் கூட இவருடைய தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம் என தற்போது பாலிவுட் மீடியா வட்டாரத்தில் கூறப்பட்டு வருகிறது.
undefined
click me!