வாவ்..வேற லெவல் அப்டேட்..சூர்யா நெக்ஸ்ட்....மீண்டும் இணையும் பிதாமகன் கூட்டணி?..இது தான் கதைக்களமாம்..

Kanmani P   | Asianet News
Published : Mar 04, 2022, 02:36 PM IST

எதற்கும் துணிந்தவனை தொடர்ந்து சூர்யா அடுத்ததாக பாலாவுடன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில்  ராமேஸ்வரம், கன்னியாகுமாரி உள்ளிட்ட இடங்களில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது...

PREV
18
வாவ்..வேற லெவல் அப்டேட்..சூர்யா நெக்ஸ்ட்....மீண்டும் இணையும் பிதாமகன் கூட்டணி?..இது தான் கதைக்களமாம்..
suriya

தமிழ் திரையுலகில் வெற்றிகரமான இயக்குனராக வலம்வருபவர் பாண்டிராஜ். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் எதற்கும் துணிந்தவன். இப்படத்தில் நடிகர் சூர்யா (suriya) ஹீரோவாக நடித்துள்ளார். 

28
suriya

ஏற்கனவே பாண்டிராஜ் (Pandiraj) இயக்கிய பசங்க 2 படத்தில் நடித்த சூர்யா தற்போது இரண்டாவது முறையாக அவருடன் கூட்டணி அமைத்துள்ளார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக டாக்டர் பட நடிகை பிரியங்கா மோகன் (Priyanka Mohan) நடித்துள்ளார்.

38
suriya

மேலும் திவ்யா துரைசாமி, தேவதர்சினி, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வினய் வில்லனாகவும், நடிகர் சூரி நகைச்சுவை வேடத்திலும் நடித்திருக்கின்றார். 

48
suriya

ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு டி.இமான் (D Imman) இசையமைத்துள்ளார். தமிழில் தயாராகி உள்ள எதற்கும் துணிந்தவன் (Etharkkum Thunindhavan) படத்தை தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர்.

58
suriya

இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் பின்னணி பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. அதன்படி இப்படம் வருகிற மார்ச் 10-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. 

68
suriya next

சூடுபிடித்து வரும் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் அப்டேட்டுக்கு இடையே அடுத்த படம் குறித்த தகவலும் கசிந்துள்ளது...அதாவது சூர்யாவின் அடுத்த படத்தை பாலா இயக்கவுள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது..

78
suriya

இந்த படம் ராமேஸ்வரம் கன்னியாகுமாரி உள்ளிட்ட இடங்களில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது... அதோடு பிதாமகன் பட ஒளிப்பதிவாளராக பாலசுப்ரமணியம் பழைய கூட்டணியில் இணைவதாகவும் கூறப்படுகிறது...

88
suriya

அதோடு நந்தா, பிதாமகன் என மாறுபட்ட கதைக்களத்தை சூர்யா கூட்டணியில் கொடுத்த பாலா தற்போது இயக்கவுள்ள இந்த படம் சுனாமிக்கு பின் மீனவர்களின் இன்னல்களை எடுத்துக்கூறும் கதையாம்...

click me!

Recommended Stories