Published : Oct 07, 2022, 01:38 PM ISTUpdated : Oct 07, 2022, 01:39 PM IST
Ponniyin selvan : பொன்னியின் செல்வன் படத்தை பார்த்த நடிகர் சூர்யாவும் ஜோதிகாவும், படத்தில் தங்களுக்கு மிகவும் பிடித்த குந்தவை மற்றும் அருண்மொழி வர்மன் கேரக்டரில் நடித்த திரிஷா மற்றும் நடிகர் ஜெயம் ரவிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பொன்னியின் செல்வன் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எந்த அளவுக்கு வரவேற்பு கிடைத்து வருகிறதோ, அதேபோல் திரையுலக பிரபலங்களும் இப்படத்தை வியந்து பாராட்டி வருகின்றனர். ஏற்கனவே நடிகர்கள் ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன் ஆகியோரு, இயக்குனர் ஷங்கரும் படத்தை பார்த்து டுவிட்டர் வாயிலாக வாழ்த்து தெரிவித்து இருந்தார்.
24
நடிகர் கமல்ஹாசனோ இதற்கு ஒருபடி மேலே போய், படக்குழுவுடன் திரையரங்கில் படத்தை பார்த்து, பின்னர் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்து அதில் படத்தை பற்றி புகழ்ந்து பேசினார். இந்த வெற்றி தன் படத்துக்கு கிடைத்த வெற்றியைப் போல் உணர்வதாக தெரிவித்திருந்தார் கமல். அதுமட்டுமின்றி இப்படம் மூலம் தமிழ்சினிமாவின் பொற்காலம் தொடங்கிவிட்டதாக நெகிழ்ச்சியுடன் பேசி இருந்தார் கமல்.
இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தை பார்த்த நடிகர் சூர்யாவும் ஜோதிகாவும், படத்தில் தங்களுக்கு மிகவும் பிடித்த குந்தவை மற்றும் அருண்மொழி வர்மன் கேரக்டரில் நடித்த திரிஷா மற்றும் நடிகர் ஜெயம் ரவிக்கு வாழ்த்து தெரிவித்து அழகிய மலர் கொத்து ஒன்றை பரிசாக அனுப்பி வைத்துள்ளனர்.
44
இதுகுறித்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி, சூர்யா மற்றும் ஜோதிகாவிற்கு நன்றி தெரிவித்துள்ளார். அதேபோல் நடிகை திரிஷாவும் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் சூர்யா மற்றும் ஜோதிகா அனுப்பிய பரிசை போட்டோ எடுத்து பதிவிட்டு இது மிகவும் அழகாகவும் இனிமையாகவும் இருப்பதாக குறிப்பிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.