கமல்ஹாசன் மீது அத்தனை பிரியமா? ஒரு ரூபாய் கூட வாங்காமல் நடித்துக் கொடுத்த பாலிவுட் பாட்ஷா!

Published : Jan 09, 2026, 12:37 PM IST

பணத்தை விட கலைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இரு பெரும் கலைஞர்களுக்கு இடையேயான மரியாதையையும், நட்பையும் வெளிச்சம் போட்டுக் காட்டம் நிகழ்வுதான் இது. அதுவும் கமல் மீது ஒரு சூப்பர் ஸ்டாருக்கு அளவு கடந்த மரியாதை இருந்துள்ளது.

PREV
15
நிஜமாலுமே சூப்பர் ஸ்டார்

இந்தியத் திரையுலகில் கலைகளின் சங்கமமாகத் திகழ்பவர் உலக நாயகன் கமல்ஹாசன். அதேபோல், பாலிவுட்டின் அசைக்க முடியாத சக்ரவர்த்தியாக விளங்குபவர் ஷாருக்கான். இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றிய 'ஹே ராம்' (2000) திரைப்படம், இன்று ஒரு கிளாசிக் படைப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால், இந்தப் படத்தின் உருவாக்கத்திற்குப் பின்னால் இருந்த ஒரு நெகிழ்ச்சியான உண்மை, ஷாருக்கான் மீது தமிழ் ரசிகர்களுக்கு இருந்த மதிப்பை மேலும் உயர்த்தியுள்ளது.

25
படத்தின் பட்ஜெட் எகிறியது; கைகொடுத்த பாலிவுட் பாட்ஷா

'ஹே ராம்' படத்தை இயக்கி, தயாரித்து, நடித்திருந்தார் கமல்ஹாசன். மிகப்பிரம்மாண்டமான வரலாற்றுப் பின்னணியில் உருவான இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது, திட்டமிட்ட பட்ஜெட்டை விட செலவுகள் பல மடங்கு அதிகரித்தன. ஒரு கட்டத்தில் படத்தின் தயாரிப்பாளராக இருந்த கமலிடம், நடிகர்களுக்குச் சம்பளம் கொடுக்கக் கூடப் பணம் இல்லாத சூழல் உருவானது.

இதை உணர்ந்த ஷாருக்கான், கமலை மேலும் சிரமப்படுத்த விரும்பவில்லை. கோடிகளில் சம்பளம் வாங்கும் ஒரு உச்ச நட்சத்திரமாக இருந்தபோதிலும், "சம்பளம் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்" என்று கூறி, ஒரு பைசா கூட வாங்காமல் முழுப் படத்திலும் நடித்துக் கொடுத்தார்.

35
சம்பளத்திற்குப் பதில் கிடைத்த அன்புப் பரிசு

சமீபத்தில் ஒரு நேர்காணலில் இது குறித்துப் பேசிய கமல்ஹாசன், "ஷாருக்கான் இந்தப் படத்தில் நடித்ததற்காக ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை. பட்ஜெட் அதிகரித்தபோது அவர் என்னிடம் பணம் கேட்கவே இல்லை. அவருக்கு ஈடாக என்னால் எதுவும் தர முடியவில்லை என்றாலும், கைமாறாக ஒரு விலையுயர்ந்த கைக்கடிகாரத்தை மட்டும் அவருக்குப் பரிசாக வழங்கினேன்," என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

மேலும், இந்தப் படத்தின் இந்தி மொழி விநியோக உரிமையை ஷாருக்கானுக்கே வழங்கியதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் ஷாருக்கான் அந்தப் படத்தின் இந்தி மறுஆக்க உரிமையையும் முறையாகப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

45
வெறும் வணிகம் அல்ல... இது ஒரு கலைப் பயணம்!

ஷாருக்கான் ஏன் இப்படிச் செய்தார்? இதற்கான விடை அவர் கமலின் மீது கொண்டிருந்த அளவற்ற மரியாதையில்தான் இருக்கிறது. தொழில்நுட்ப ரீதியாக இந்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் கமலின் முயற்சியில் தானும் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என்பது ஷாருக்கின் ஆசையாக இருந்தது.படத்தில் சாகேத் ராமிற்கு (கமல்) நண்பராக வரும் அம்ஜத் அலி கான் கதாபாத்திரம், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் மிக முக்கியமான பாத்திரம். இக்கதாபாத்திரத்தின் ஆழம் பிடித்ததாலேயே ஷாருக் விரும்பி நடித்தார்.சூப்பர் ஸ்டார் என்ற ஈகோவைத் தாண்டி, ஒரு சக கலைஞனுக்குச் சுமையாக இருக்கக்கூடாது என்ற ஷாருக்கானின் பண்பு அனைவரையும் வியக்க வைத்தது.

55
கலையை நேசிப்பவர்கள் அவர்கள்.!

வெறும் வியாபாரமாக மட்டுமே பார்க்கப்படும் இன்றைய திரையுலகில், கமல்ஹாசன் - ஷாருக்கான் இடையிலான இந்த பந்தம் ஒரு புதிய இலக்கணத்தை எழுதியுள்ளது. "கலையை நேசிப்பவர்கள் பணத்தை ஒரு பொருட்டாகக் கருத மாட்டார்கள்" என்பதற்கு 'ஹே ராம்' படமும், ஷாருக்கானின் அந்தப் பெருந்தன்மையும் என்றென்றும் சாட்சியாக இருக்கும்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories