Sivakarthikeyan and Thaai Kizhavi Combo trending:தாய்க்கிழவி படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். படம் எப்படி இருக்கும் என்றும் என்ன கதைக்களம் என்றும் ரசிகர்கள் ஆர்வத்துடன் இருந்து வருகிறார்கள். இதனை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தாய் கிழவி திரைப்படம் வரும் 27 ஆம் தேதி அதாவது நாளை வெளியாகவுள்ள நிலையில், அதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில், ராதிகா சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்தப் படம் ஏற்கனவே போஸ்டர், கிளிம்ப்ஸ் மூலமாகவே கவனம் பெற்றுவருகிறது.
24
தாய் கிழவி - சிவக்குமார் முருகேசன்
தாய்க்கிழவி திரைப்படத்தை சிவக்குமார் முருகேசன் இயக்கியுள்ளார் இந்த படத்தை சிவகார்த்திகேயன் தான் தயாரித்துள்ளார். இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளதால் இதன் பிறகு சிவகுமார் முருகேசன் சிவகார்த்திகேயன் நடிப்பில் சேயோன் படத்தை இயக்கி வருகிறார். தற்போது சிவகுமார் முருகேசன் அடுத்தடுத்து படங்களை அதிரடியாக கொடுத்து வரும் நிலையில் ராதிகா சரத்குமாரும் சிவகார்த்திகேயனும் தான் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளனர்.
34
ட்ரெண்டிங்காக மாற சிவகார்த்திகேயன் பேச்சு:
தாய்க்கிழவி திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது. இவ்விழாவில் சிவகார்த்திகேயன் பேசியது மிகப்பெரிய கவனத்தை ஈர்த்திருக்கிறது.இதுவரை நான் ரீமேக் படங்களில் நடித்ததே இல்லை. கதை கேட்டுத்தான் நடித்திருக்கிறேன். எனவே ஒரு படத்தின் வெற்றி தோல்வியில் எனக்கு பொறுப்பு இருக்கிறது. எனக்கு வாழ்வு கொடுத்த சினிமாவுக்கு எதாவது செய்ய வேண்டும் என்றுதான் இந்த மாதிரியான படங்களை செய்கிறேன்.மாறாக யாரையும் தாண்ட வேண்டும்; அட்டாக் செய்ய வேண்டும் என்று நான் வரவில்லை. எனக்கு இருக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்த நினைக்கிறேன். அதற்கு மக்கள் ஆதரவு கொடுக்கிறார்கள். சினிமாவில் இருக்கும் சிலர்தான் தடையாக இருக்கிறார்கள். அந்தத் தடையை தாண்டி வர நான் ரெடி. ஏன் இப்படி செய்கிறீர்கள். என்றெல்லாம் மிக வருத்தத்துடன் பேசி உள்ளார் சிவகார்த்திகேயன்
44
சேயோன் படத்தின் டீஸர்:
சேயோன் படத்தின் டீசரில் ஏன் இவ்வளவு கோபமாக பேசி உள்ளார் சிவகார்த்திகேயன் படத்திற்காகவா? இல்லைஅவரது சினிமாவின் வாழ்க்கைக்காகவா? என்று அனைவருக்கும் கேள்வி எழுந்துள்ளது. தற்போது தாய்க்கிழவி படத்தின் டீசர் விழாவில் அவர் பேசியதும் அனைவருக்கும் மனதினுள் கேள்விகளை எழுப்பி வருகின்றது. சிவகார்த்திகேயனை யார் வம்பு கிழிக்கின்றார்கள் . என்று தெரியவில்லை. சேயோனின் வசனம்: அவன் பாட்டுக வெளியே போய்க்கிட்டு வந்துகிட்டு இருந்தியா அவனை வா வான்னு வம்பு இழுக்கறாங்க அவ வராம சும்மா இருப்பானா. இதில் பேசப்படும் பேச்சுக்கள் அனைத்தும் படத்திற்காகவா இல்ல சிவகார்த்திகேயனின் சினிமாவின் வாழ்க்கைக்காகவா என்று குழப்பமாகவே இருந்து வருகிறது
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.