உலகம் முழுவதும் மகளிர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என ஏராளமானோர் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். அந்த வகையில் பாடலாசிரியர் வைரமுத்துவும் கவிதை நடையில் தனது மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார்.
24
அந்த பதிவில்,
“மாலையும் நகையும்
கேட்கவில்லை பெண்;
மதித்தல் கேட்கிறாள்
வீடும் வாசலும்
விரும்பவில்லை பெண்;
கல்வி கேட்கிறாள்
ஆடம்பரம் அங்கீகாரம்
ஆசைப்படவில்லை பெண்;
நம்பிக்கை கேட்கிறாள்
வைரமுத்துவின் இந்த மகளிர் தின வாழ்த்தை பார்த்து டென்ஷன் ஆன பாடகி சின்மயி, கவிதை நடையிலேயே அவருக்கு பதிலடி கொடுத்து பதிவிட்டிருந்தார். அவர் பதிவிட்டதாவது : “அவ்வீட்டு வாசலை தாண்டும்பொழுது காம வெறியர்களை கேட்கவில்லை பெண்; பாதுகாப்பு கேட்க்கிறாள். பாலியல் குற்றவாளிகளை அடையாளம் காட்டும்பொழுது அவதூறு கேட்கவில்லை பெண்; நியாயம் கேட்கிறாள்.
44
இவர் எப்படி பெண்களின் பாதுகாப்பு குறித்தும் சுதந்திரம் குறித்தும் பேசுகிறார். என்னால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை” என சின்மயி அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். சின்மயியின் இந்த பதிலடி டுவிட் வைரலாகி வருகிறது. பாடகி சின்மயி, வைரமுத்துவுக்கு எதிராக மீடூ புகார் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.