சினிமாவை விட்டு மொத்தமாக விலகிய சிம்பு பட நடிகை... அடுத்து என்ன செய்ய திட்டமிட்டுள்ளார் தெரியுமா?

First Published Oct 10, 2020, 12:29 PM IST

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தியிலும் புகழ் பெற்ற நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த சனா கான் திடீரென சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். 

தமிழில் சிம்பு நடித்த சிலம்பாட்டம் படம் மூலம் அறிமுகமானவர் இளம் நடிகை சனா கான். அதன் பின்னர் தமிழில் பயணம், ஒரு நடிகையின் டைரி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
undefined
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தியிலும் புகழ் பெற்ற நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த சனா கான் திடீரென சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார்.
undefined
இதுகுறித்து சோசியல் மீடியா பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள சனா கான், இந்த உலகத்தில் மனிதன் தோன்றிய உண்மையான நோக்கம் பணத்தையும், புகழையும் துரத்துவதற்குத்தானா? மனிதன் தன் வாழ்க்கையைத் தேவைப்படுபவர்களுக்கு, வறியவர்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பது அந்த வாழ்க்கை கடமையில் ஒரு அங்கம் இல்லையா?.
undefined
ஒரு நபர், தான் எப்போது வேண்டுமானாலும் இறந்து போகலாம் என்பதையும், அவர் இறந்த பிறகு அவருக்கு என்ன ஆகும் என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டாமா? இந்த இரண்டு கேள்விகளுக்கும் நீண்ட காலமாக நான் பதில் தேடி வருகிறேன். அதுவும் குறிப்பாக என் மரணத்துக்குப் பின் எனக்கு என்ன ஆகும் என்கிற கேள்விக்கு. எனது மதத்தில் இந்தக் கேள்விக்கான பதிலைத் தேடும்போது, பூமியில் இந்த வாழ்க்கையே, மரணத்துக்குப் பிறகான வாழ்க்கையை மேம்படுத்தத்தான் என்பதை உணர்ந்தேன்.
undefined
எனவே படைத்தவனின் ஆணைக்கு இணங்க மனிதனின் பாவட்ட வாழ்க்கையை தவிர்த்து, மனித இனத்துக்குச் சேவை செய்ய வேண்டும் என முடிவெடுத்துள்ளேன்.
undefined
இன்று ஒரு விஷயத்தை அறிவிக்கிறேன். இன்று முதல் திரைத்துறை வாழ்க்கையில் இருந்து நிரந்தரமாக விடை பெறுகிறேன். என்னைப் படைத்தவனின் ஆணைக்கிங்க மனித இனத்திற்கு சேவை செய்ய முடிவெடுத்துள்ளேன். எனது இந்த முடிவுக்கு ஒத்துழைப்பு தந்து, இனி யாரும் சினிமா தொடர்பான பணிகளுக்கு என்னை அழைக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
undefined
click me!