விஜய் சேதுபதியின் அதிர்ச்சி செயல்..! படப்பிடிப்பை விட்டு வெளியேறினாரா ஸ்ருதிஹாசன்..?

First Published Nov 21, 2020, 12:47 PM IST

இயக்குநராக அறிமுகமாகி 15 வருடங்களுக்கு மேல் ஆகும் நிலையில்  தனது 5 வது படமான லாபம் படத்தை இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கி வருகிறார்.
 

இப்படத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் ஆகியோர் முதல் முறையாக ஜோடி சேர்த்துள்ளனர்.
undefined
2003ல் ‘இயற்கை’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.பி.ஜனநாதன். மிக நிதானமாகப் படமெடுப்பவர் என்று பெயரெடுத்தவர் ஜனநாதன்.
undefined
இதை தொடர்ந்து ’ஈ’,’பேராண்மை’,’பொறம்போக்கு என்கிற பொதுவுடமை’ ஆகிய நான்கு படங்களை மட்டுமே இயக்கியுள்ளார்.
undefined
இந்நிலையில் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் ஜோடி சேரும், இவர்களுடன் ‘மெட்ராஸ்’ கலையரசன் முக்கிய வேடத்தில் நடிக்கும் பலாபம் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு துவங்கியது.
undefined
ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். 7சிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் விஜய் சேதுபதியும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.
undefined
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு, கொரோனா பிரச்சனை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் துவங்கியுள்ளது.
undefined
விஜய் சேதுபதிக்கு பல ரசிகர்கள் உள்ளனர். அதே போல் தன்னுடைய ரசிகர்கள் தன்னை பார்க்க வந்தால் முகம் சுழிக்காமல் அவர்களை சந்தித்து, கட்டி அணைத்து முத்தம் கொடுத்து புகைப்படத்திற்கு போஸ் கொடுப்பர் என்பது நாம் அறிந்தது தான்.
undefined
தற்போது கொரோனா காலம் என்று கூட பாராமல், விஜய் சேதுபதி ரசிகர்களுடன் நெருக்கமாக நின்று புகைப்படம் எடுத்து கொண்டது, ஸ்ருதி ஹாசனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, இதனால் ஏற்பட்ட அச்சம் காரணமாக ஸ்ருதி ஹாசன் படப்பிடிப்பை விட்டு வெளியேறியதாக ஒரு தகவல் தீயாக பரவி வருகிறது.
undefined
ஆனால் இப்படிபரவி வரும் தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.
undefined
click me!