சித்ரா தற்கொலை... இதுவரை வெளியாகாத அதிர்ச்சி தகவல்..! செம்ம ஷாக்கில் ரசிகர்கள்..!

First Published Dec 11, 2020, 10:44 AM IST

சின்னத்திரை நடிகை சித்ரா தனியார் ஓட்டலில் டிசம்பர் 9 ஆம் தேதி இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பியுள்ளதால், போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், இதுவரை வெளியாகாத தகவலை தற்போது போலீசார் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 

விஜே சித்ராவிற்கும் ஹேமந்த் ரவிக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம், மிக பிரமாண்டமாக நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், இருவரும் அக்டோபர் மாதம் பதிவுத் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.
undefined
ரகசியமாக நடந்த இந்த பதிவு திருமணத்தில் இரு வீட்டை சேர்ந்தவர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.
undefined
திருமணமான 2 மாதங்களிலேயே, அதுவும் மன அழுத்தம் காரணமாக சித்ரா தற்கொலை முடிவை எடுத்துள்ளதால்.... அப்படி இவருக்கு என்ன பிரச்சனை இருந்தது என்றும், வரதட்சணை கொடுமை போன்ற ஏதாவது சிக்கல்கள் இருக்குமோ? என்ற சந்தேகத்தில் ஆர்.டி.ஓ.விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
undefined
இதனிடையே ஆர்டிஓ விசாரணைக்கு பின், நேற்று காலை 11 மணி அளவில் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சித்ராவின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டது. மருத்துவர் சதீஷ் தலைமையில் இரண்டு மருத்துவர்கள் பிரேத பரிசோதனையில் ஈடுபட்டனர். 12.35 மணி அளவில் பிரதேச பரிசோதனை நிறைவடைந்து, சித்ராவின் உடல்... கோட்டூர் புறத்தில் உள்ள அவரது இல்லத்தில், இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
undefined
இவரது இறுதி ஊர்வலத்தில், பல சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டதையும் பார்க்கமுடிந்தது. இந்நிலையில் தொடர்ந்து சித்ராவின் தற்கொலை விவகாரம் குறித்து விசாரணை செய்யப்பட்டு வரும் நிலையில், இதுவரை வெளியாகாத புதிய தகவல் ஒன்றை போலீசார் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
undefined
ஹேமந்த் அவ்வப்போது சித்ராவிடம் குடித்து விட்டு பிரச்சனை செய்ததால் வந்த மன அழுத்தம் மற்றும் சித்ராவின் தாய் தரப்பில் இருந்தும் மன அழுத்தம் கொடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளதாகவும். அதே போல் சித்ரா போனில் சில மெசேஜ் அழிக்கப்பட்டுள்ளதால், அதனை சைபர் கிராம் போலீசார் உதவியோடு மீட்க முயற்சி செய்து வருவதாகவும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
undefined
click me!