பிரபல முன்னணி நடிகர் திடீர் தற்கொலை...! கணவரை இழந்து தவிக்கும் இளம் நடிகை..! திரையுலகில் அடுத்த சோகம்!

First Published Jul 30, 2020, 1:59 PM IST

இளம் நடிகர் சுஷாந்த் தற்கொலை, திரையுலகில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், அவரை தொடர்ந்து 32 வயதாகும் மற்றொரு இளம் நடிகர், தற்கொலை செய்துகொண்டுள்ளார். 
 

பிரபல மராத்தி நடிகர், ஆஷுடோஷ் பாக்ரே என்பவர் தான் தற்போது தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
undefined
இவர் மராத்தியில் பல ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். குறிப்பாக இவர் நடிப்பில் இவெளிவந்த Bhakar, Ichar Tarla Pakka உள்ளிட்ட படங்களில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்த படங்களாகும்.
undefined
இவர் மராத்தி நடிகையான மயூரி தேஷ்முக் என்பவரை கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர் ஒரு சில மராத்தி படங்களில் நடித்திருந்தாலும், இவரை திருமணம் செய்து கொண்ட பின் சீரியல் நடிகையாக மாறினார்.
undefined
Khulta Kali Khulena என்கிற சீரியலில் முன்னணி நடிகையாக நடித்து வருகிறார்.
undefined
இந்நிலையில், இவர்கள் மஹாராஷ்டிராவில் உள்ள கணேஷ் நகரில் வசித்து வரும் நிலையில், திடீர் என நடிகர் ஆஷுடோஷ் பாக்ரே அவருடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
undefined
இவருடைய பெற்றோர் தான் முதலில் இவருடைய தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டுபிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தது தெரியவந்துள்ளது.
undefined
கடந்த சில மாதங்களாகவே, மன அழுத்தத்தில் இவர் இருந்ததாகவும், இதன் காரணமாகவே ஆஷுடோஷ் பாக்ரே தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
undefined
எனினும் அவருடைய அறையை சோதனை செய்ததில் எந்த ஆதாரமும் கிடைக்காததால், போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மன அழுத்தம் காரணமாக, சுஷாத் சிங்கை தொடர்ந்து, மற்றொரு நடிகை தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
undefined
click me!