இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்தாண்டு ஷாருக்கான் மகன் போதை வழக்கில் சிக்கியபோது இதன் ஷூட்டிங்கும் தடைபட்டது. மகனை எப்படியாவது வழக்கில் இருந்து மீட்க வேண்டும் என்ற முனைப்பில் இருந்த ஷாருக்கான் இப்படத்தை கிடப்பில் போட்டார். இதையடுத்து இப்படம் குறித்த எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகாததால், இப்படம் கைவிடப்பட்டதாக பாலிவுட் வட்டாரத்தில் செய்திகள் பரவத் தொடங்கின.