கடைசியாக அணிந்த மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் நடத்திய சித்ரா..! ரசிகர்களை கலங்க வைத்த போட்டோஸ்!

First Published Jan 5, 2021, 1:55 PM IST

தொடர்ந்து சித்ராவின் தற்கொலை விவகாரத்தில் தீவிர விசாரணை நடந்து வரும் நிலையில், தற்போது வரை ஏன்? எதற்காக சித்ரா இந்த முடிவை எடுத்தார் என்பது புரியாத புதிராகவே உள்ளது. இந்நிலையில் இவர் கடைசியாக மாடர்ன் உடையில் எடுத்து கொண்ட போட்டோ ஷூட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சித்ரா கடந்த மாதம் டிசம்பர் 9 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள், சந்தேகங்கள் எழுந்தன. இதையடுத்து போலீசார் சித்ராவின் கணவர் ஹேமந்த், உறவினர்கள், நண்பர்கள், சக நடிகர், நடிகைகளிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தது அனைவரும் அறிந்தது தான்.
undefined
சித்ராவை ஹேமந்த் தான் அடித்து கொன்றுவிட்டதாக அவருடைய தாயார் குற்றச்சாட்டி வந்த நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் சித்ரா தற்கொலை தான் செய்து கொண்டார் என்பது உறுதியானது.
undefined
சித்ரா - ஹேமந்தை பதிவு திருமணம் செய்து கொண்ட இரண்டே மாதத்தில் உயிரிழந்ததால், ஆர்.டி.ஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு, விசாரணையை துரிதமாக நடத்தி முடித்துள்ளனர் அதிகாரிகள். மேலும் இதில் சித்ராவிரா வரதட்சிணை கொடுமையால் உயிரிழக்க வில்லை என்பது தெரியவந்தது.
undefined
மேலும் சித்ராவின் நண்பர்கள் மற்றும் அவருக்கு நெருக்கமான வட்டாரத்தை சேர்ந்தவர்கள் அனைவரும், சித்ரா தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பே இல்லை... அவரது மரணத்தில் உள்ள மர்மம் விலக வேண்டும் கூறி கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
undefined
சித்ரா நடித்து வரும் சீரியல் தரப்பு மற்றும், கடைசியாக கலந்து கொண்ட ஷூட்டிங் என அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்தியதில் எந்த பிரச்சனை இல்லை என்பதே பதிலாக கிடைத்தது.
undefined
இந்நிலையில் சித்ரா கடைசியாக ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, அவர் அணிந்து விளையாடிய மாடர்ன் உடையில் எடுத்து கொண்ட போட்டோ ஷூட் புகைப்படங்கள் சில வெளியாகியுள்ளது.
undefined
எந்த ஒரு பிரச்னையும் இல்லாதது போல் மிகவும் தெளிவான முகத்துடன் அழகாக போஸ் கொடுத்துள்ளார் சித்ரா.
undefined
பூரித்த சிரிப்பில் சித்ரா எடுத்து கொண்ட இந்த புகைப்படங்கள் பார்க்கும் ரசிகர்கள் கண்களையே கலங்க வைக்கும் விதத்தில் உள்ளது.
undefined
சித்ரா இப்போது இல்லை என்பது இப்போதும் நம்ப மறுக்கிறது மனசு என்பதே உண்மை.
undefined
click me!