புயலில் விழுந்து கிடைக்கும் மரங்களுக்கு நடுவே குத்தாட்டம் போட்ட சீரியல் நடிகை.! வலுக்கும் கண்டனம்..!

First Published May 20, 2021, 11:54 AM IST

பிரபல சீரியல் நடிகை ஒருவர், குஜராத் மற்றும் மும்பையில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய 'டத் தே' புயலுக்கு மத்தியில் குத்தாட்டம் போட்டதற்கு பலர் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
 

அரபிக்கடலில் உருவான 'டவ் தே' புயல் குஜராத்தில் மே 17 ஆம் தேதி நள்ளிரவு கரையை கடந்தது. சுமார் 160 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய சூறைக்காற்றுக்கு தாக்குப்பிடிக்காமல் ஆமதாபாத் உள்ளிட்ட பல இடங்களில் சுமார் 16 ஆயிரம் வீடுகள் பலத்த சேதம் அடைந்தன.
undefined
60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் அடியோடு சாய்ந்ததால் குஜராத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும், மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் குஜராத்தின் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கின.
undefined
சாலை ஓரங்களில் இருந்த ஆயிரக்கணக்கான மரங்கள் அடியோடு சாய்ந்தது. மேலும் அகமதாபாத், வடோதரா , சூரத்ம் மும்பை உள்ளிட்ட நகரங்கள் புயலின் கோரத் தாண்டவத்தில் பலத்த சேதங்களை சந்தித்துள்ளது.
undefined
பலர் வீடுகளை இழந்துள்ளதால், அவர்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் பத்திரமான இடத்தில் தங்கவைத்து, அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது.
undefined
புயலில் போது பெய்த மழையின் காரணமாக இன்னும் பல இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால், பலரது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
undefined
இந்நிலையில் இந்தி சீரியல் நடிகை தீபிகா சிங் என்பவர், மும்பையில் புயல் வீசியபோது, கவர்ச்சி உடையில் குதூகலமாக குத்தாட்டம் போட்டுள்ளார்.
undefined
இயற்க்கை சீற்றத்தால் பலர் வீடு, உடைமைகளை இழந்து தவித்து வரும் நிலையில் இவர் இது போல், அடியோடு சாய்ந்த மரங்களுக்கு நடுவே ஆட்டம் போட்டுள்ளதற்கு பலர் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
undefined
மேலும் இதில் இவர் புயல் கடக்கும் வரை காத்திருப்பதை விட... நடனமாடி மகிழ்வதாகவும் தெரிவித்துள்ளார்.
undefined
இந்த நடிகை இந்தியில் இருந்து தமிழில் டப்பிங் செய்யப்பட்டு ஒளிபரப்பான, 'என் கணவன் என் தோழன்' சீரியலில் நாயகியாக நடித்தவர். இந்த சீரியல் தான் தற்போது 'ராஜா ராணி 2 ' என்கிற பெயரில் ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடத்தக்கது.
undefined
click me!