seenu ramasamy : நான் என்ன தப்பு பண்ணேன்... இளையராஜாவின் நிராகரிப்பால் மேடையில் உடைந்து அழுத சீனு இராமசாமி

First Published Jun 18, 2022, 11:50 AM IST

seenu ramasamy : மாமனிதன் படத்தின் பிரஸ் மீட்டில் பேசிய இயக்குனர் சீனு இராமசாமி, தன்னை இளையராஜா நிராகரித்ததாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். 

விஜய் சேதுபதி நாயகனாக அறிமுகமான தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் சீனு இராமசாமி. இதையடுத்து விஜய் சேதுபதியின் ஆஸ்தான இயக்குனரான சீனு இராமசாமி, அவரை வைத்து தர்மதுரை, இடம் பொருள் ஏவல் போன்ற படங்களை இயக்கினர். தற்போது இவர்கள் கூட்டணியில் மாமனிதன் திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தை யுவன் தயாரித்துள்ளார்.

இப்படத்தின் கூடுதல் சிறப்பம்சம் என்னவென்றால் இதற்கு யுவன் சங்கர் ராஜாவும், இளையராஜாவும் இணைந்து இசையமைத்துள்ளனர். கடந்த 2019-ம் ஆண்டே எடுத்துமுடிக்கப்பட்ட இப்படம் பல்வேறு பிரச்சனைகள் காரணமாக பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிவைக்கப்பட்டது. தற்போது அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டு வருகிற ஜூன் 24-ந் தேதி இப்படம் ரிலீசாக உள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் பிரஸ் மீட் நேற்று நடந்தது. இதில் இயக்குனர் சீனு இராமசாமி பேசுகையில், தன்னை இளையராஜா நிராகரித்ததாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அப்போது அவர் பேசியதாவது: மாமனிதன் படத்திற்கு இளையராஜாவும் அவரது மகன்கள் யுவன் சங்கர் ராஜா மற்றும் கார்த்திக் ராஜா ஆகியோர் இசையமைக்க உள்ளதாக முதலில் முடிவானது. 

அதன் பின்னர் கார்த்திக் ராஜா இந்த படத்தில் இருந்து வெளியேறினார். என்ன காரணம்னு தெரியல. இந்தப் படம் யுவன் தயாரிப்பில் உருவாவதால் ஒரு சிறந்த படமாக இதனை கொடுக்க வேண்டும் என்பதற்காக, கதைக்களத்தை இளையராஜாவின் சொந்த ஊரான பண்ணைபுரத்திற்கு மாற்றினேன். அங்குள்ள இளையராஜாவின் வீடு இருக்கும் தெருவில்தான் முதல் ஷாட்டை படமாக்கினேன். குறுகிய காலத்தில் மொத்த ஷூட்டிங்கையும் முடித்துக்கொடுத்தேன். 

மாமனிதன் படத்தின் பாடல் காட்சிகள் அனைத்தும் மெட்டமைக்கும் முன்பே படமாக்கிவிட்டோம். அதன் பிறகுதான் இப்படத்தின் பாடல்கள் உருவாக்கப்பட்டது. இப்படத்திற்கான பாடல் கம்போஸிங், ரீரெக்கார்டிங் போன்ற எதிலும் நான் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. படத்துக்கு யார் பாடல் எழுதுகிறார்கள் என்பதுகூட எனக்கு தெரியவில்லை. ஒருநாள் யுவனின் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு சென்றிருந்தபோது, அங்கு வந்திருந்த ஒருவர் என்னிடம் வந்து ‘நான் உங்க படத்துல ஒரு பாட்டு எழுதி இருக்கிறேன்’ என்று சொன்னார். 

இளையராஜாவின் இசையை நான் எப்போதும் பாராட்டுகிறேன். அவரை இந்த படத்தின் முதல் மாமனிதனாக நினைக்கிறேன். ஆனால் காரணமே இன்றி என்னை ஏன் அவர் நிராகரிக்கணும். காரணமில்லாத நிராகரிப்பு எனக்கு நிறைய வலியைக் கொடுத்துள்ளது” என மேடையில் கண்கலங்கியபடி பேசினார். பேசும்போது அவர் இடை இடையே உடைந்து அழுகவும் செய்தார். அப்போது நடிகர் விஜய் சேதுபதி வந்து அவரை ஆசுசாசப்படுத்தினார்.

இதையும் படியுங்கள்.... சிம்புவால் தான் அது நடந்தது... பல வருட சீக்ரெட்டை திருமணத்திற்கு பின் போட்டுடைத்த விக்னேஷ் சிவன்

click me!