தமிழ் திரையுலகில் இயக்குனராக இருந்து, பின்னர் நடிகராக மாறிய பலர் இருந்தாலும்... சிலர் இவை இரண்டிலுமே கில்லியாக இருந்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம்பிடித்து விடுகிறார்கள்.
25
அந்த வகையில், ’சுப்ரமணியபுரம்’ என்ற திரைப்படம் மூலம் இயக்குனராக மட்டும் இன்றி, நடிகராகவும் அறியப்பட்டவர் சசிகுமார். இவரின் முதல் படமே மிகவும் எதார்த்தமான கதைக்களம் என்பதாலும், வெற்றிப்பட இயக்குனர் என்கிற அந்தஸ்தை பெற்று தந்தாலும், ரசிகர்கள் மத்தியில் கவனிக்கப்பட கூடிய பிரபலமாக மாறினார்.
இப்படத்தை தொடர்ந்து கடந்த 2010 ஆம் ஆண்டு ’ஈசன்’ என்ற திரைப்படத்தை இயக்கிய நிலையில்... அடுத்தடுத்து படங்கள் நடிப்பதில் பிஸியானாதான் முழு நேர நடிகராகவே மாறினார். இந்நிலையில், சுமார் 13 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளார் சசிகுமார்.
45
இந்த படத்தின் ஸ்கிரிப்டிங் வேலைகள் துரிதமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் விரைவில் படப்பிடிப்பும் ஆரம்பமாகும் என எதிர்பார்க்க படுகிறது. இந்த படத்தில், நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் மகன் ஷண்முக பாண்டியன் ஹீரோவாக நடிக்க உள்ளார். அதிரடி ஆக்ஷன் கதையம்சம் கொண்ட, படமாக இப்படம் உருவாக உள்ளதாகவும், இதில் பாலிவுட் இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யாப் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஷண்முக பாண்டியனுக்காக இந்த படத்தை இயக்க உள்ளார் சசிகுமார். மேலும் இப்படத்தின் ஹீரோயின் ஆகியோரின் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், விரைவில் இப்படம் குறித்த அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.