கன்னட திரையுலகையே உலுக்கிய போதைப்பொருள் வழக்கில் பிரபல நடிகைகளான சஞ்சனா கல்ராணி, ராகினி திவேதி ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
undefined
இந்த இரு நடிகைகள் மட்டுமல்லாது 13 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. பாலிவுட்டைத் தொடர்ந்து கன்னட திரையுலகில் பார்ட்டிகளில் போதைப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டது மிகப்பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
undefined
இருவரது ஜாமீன் மனுவையும் ரத்து செய்த நீதிமன்றம் விசாரணைக்காக காவலை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சிறையில் இருவரும் முடியை பிடித்துக் கொண்டு அடித்துக்கொள்ளாத குறையாக சண்டை போட்டுக்கொள்வதாக கூறப்படுகிறது.
undefined
இந்நிலையில் சிறையில் உள்ள சஞ்சனா, ராகினி இருவரிடமும் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இருவரும் அளவுக்கு அதிகமாக சொத்து உள்ளது தெரியவந்துள்ளது.
undefined
சினிமாவில் ஈட்டிய வருமானத்தை விடவும் அவர்களுடைய சொத்து மதிப்பு அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது.
undefined
இதையடுத்து வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது குறித்து இரு நடிகைகளிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
undefined