இந்த மனசு தான் கடவுள் சார்... சொன்ன வாக்கை காப்பாற்றிய சமந்தா! குவியும் வாழ்த்து..!

First Published Apr 21, 2021, 10:55 AM IST

தமிழ் மற்றும் தெலுங்கு, திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் சமந்தா, பெண் ஆட்டோ ஓட்டுநர் ஒருவருக்கு கார் வாங்கி கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
 

கல்யாணத்திற்கு பிறகு நடிகைகளுக்கு அக்கா, அண்ணி, அத்தை, அம்மா வேடங்கள் மட்டுமே கிடைக்கும் என்பதை மாற்றியவர் சமந்தா. தெலுங்கில் பிரபல நடிகரான நாக சைதன்யாவை திருமணம் செய்த பிறகு சமந்தா பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார்.
undefined
தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். கவர்ச்சிக்கும் எவ்வித தடையும் சொல்லாமல், தன்னுடைய நடிப்பு திறமைக்கு சவாலான கதாபாத்திரங்களை நடித்து வருகிறார்.
undefined
ஆஹா ஓடிடி தளத்தில் பிரபலமான சாம் ஜாம் கலந்துரையாடல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது. தற்போது பிரபல வெப் தொடரான பேமிலி மேன் 2-வில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருப்பது என சமந்தாவின் கேரியர் டாப் கியரில் போய்க்கொண்டிருக்கிறது.
undefined
இவர் தொகுத்து வழங்கிய, நிகழ்ச்சியில் கவிதா என்கிற பெண் ஒருவர் கலந்து கொண்டார். அப்போது தன்னுடைய தாய் மற்றும் தந்தை மறைவிற்கு பின், தன்னுடைய 7 சகோதரிகளையும் ஆட்டோ ஓட்டி காப்பாற்றுவதாக உருக்கமாக தெரிவித்திருந்தார்.
undefined
இதனை நிறைவேற்றும் விதமாக, பெண் ஆட்டோ டிரைவர் கவிதாவுக்கு 12.5 லட்சம் மதிப்புள்ள புதிய கார் ஒன்றை வாங்கி கொடுத்த நிகழ்வு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
undefined
அடுத்தவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என நினைப்பதும், அதனை செய்யும் மனசு தான் கடவுள் என ரசிகர்கள் சமந்தாவை பாராட்டி வருகிறார்கள்.
undefined
click me!