லாக்டவுனில் வீட்டை விட்டு வெளியே வந்த சாய்பல்லவி... மாஸ்க் அணிந்து ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட மாஸான போட்டோஸ்!

First Published Sep 1, 2020, 6:41 PM IST


நீண்ட நாட்களுக்கு பிறகு சாய் பல்லவியை போட்டோவில் பார்த்த ரசிகர்கள் அந்த போட்டோவை சோசியல் மீடியாவில் ஏகத்திற்கு ஷேர் செய்து வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சாய் பல்லவி இந்த கொரோனா லாக்டவுன் நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.
undefined
2015ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் மலையாள திரைப்படம் "பிரேமம்". இந்தப்படம் மலையாளத்தைக் கடந்து தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. "பிரேமம்" படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் தொடங்கிய சாய் பல்லவியின் திரைப்பயணம் தற்போது வரை வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது.
undefined
பக்கா தமிழ் பெண்ணான சாய் பல்லவி டாக்டர் பட்டம் பெற்றவர். தமிழில் கரு படத்தின் மூலம் அறிமுகமான சாய் பல்லவி, அடுத்து தனுஷுக்கு ஜோடியாக மாரி 2 படத்திலும் சூர்யாவுடன் என்ஜிகே படத்திலும் நடித்தார்.
undefined
மாரி 2 படத்தில் தனுஷுடன் சேர்ந்து சாய் பல்லவி ரவுடி பேபி பாடலுக்கு போட்ட ஆட்டம் பட்டி, தொட்டி எல்லாம் தாண்டி ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே அதிர வைத்தது.
undefined
மேலும் மலையாளம், தெலுங்கு திரைப்படங்களில் பிசியாக நடித்து வரும் சாய் பல்லவி கைவசம் பல படங்கள் உள்ளன.கிடைத்த கதைகளை எல்லாம் ஒப்புக்கொள்ளாமல் தனக்கு பொருத்தமான நல்ல கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.
undefined
கவர்ச்சி காட்டுவது, ஹீரோ பின்னாடி சுத்தி டூயட் பாடுவது என இல்லாமல் வெயிட்டான கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடிப்பதால் சாய் பல்லவிக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு.
undefined
கொரோனா லாக்டவுன் காரணமாக கடந்த 5 மாதமாக எந்த திரையுலகினரையும் வெளியில் பார்க்க முடியவில்லை. சில நாட்களுக்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பண்ணை வீடு விஜயம், கமல் ஹாசனின் பிக்பாஸ் புரோமோ, தளபதியின் மரம் நடும் சேலஞ்ச், தலயின் கார் டிராவல் என சில போட்டோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகின.
undefined
அந்த வரிசையில் தற்போது தமிழக மக்களின் மனம் கவர்ந்த நடிகை சாய் பல்லவி திருச்சியில் உள்ள கல்லூரி ஒன்றிற்கு தேர்வு எழுதுவதற்காக வந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
undefined
நேற்று சாய் பல்லவி திருச்சியில் உள்ள எம்ஏஎம் கல்லூரிக்கு வந்திருக்கிறார். அங்கு நடந்த ஒரு தேர்வில் பங்கேற்க தான் சாய் பல்லவி வந்திருக்கிறார். அங்கு அவர் மற்றவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தீயாய் பரவி வருகிறது.
undefined
தேர்வு எழுத வரிசையில் காத்திருந்த அந்த நேரத்தில் ஆண் ரசிகர்கள், பெண் ரசிகைகளுடன் தனித்தனியே நின்று செல்ஃபி எடுத்துக்கொண்டுள்ளார். சிரித்த முகத்தோடு இருக்கும் சாய்பல்லவியின் இந்த போட்டோஸ் லைக்குகளை குவிக்கிறது.
undefined
நீண்ட நாட்களுக்கு பிறகு சாய் பல்லவியை போட்டோவில் பார்த்த ரசிகர்கள் அந்த போட்டோவை சோசியல் மீடியாவில் ஏகத்திற்கு ஷேர் செய்து வருகின்றனர்.
undefined
click me!