விமானத்துக்கு நேரம் ஆனதால் உடனே அங்கிருந்து கிளம்பிவிட்டார் ரோபோ சங்கர். அவர் சென்ற பிறகு அவரின் பேச்சுக்கு பத்திரிகையாளர் ஒருவர் கண்டனம் தெரிவித்தார். ஒரு சபை நாகரீகம் என்பது தெரியவில்லை என்றால் அது ரொம்ப கேவலம், அவர் நடிப்பதற்கே லாயக்கு இல்லாதவர். அவரையெல்லாம் மேடையில ஏத்தாதீங்க. மேடையில் இருக்கும் ஒரே ஒரு பெண்மணியான ஹன்சிகாவை அவர் எல்லைமீறி பேசி இருக்கிறார்.
இந்த மாதிரி ஆட்களை இனி மேடையில் ஏத்தாதீங்க. காலை தொட்டு பார்க்கனும்னு நீங்க செவத்துக்குள்ள எதுவேணாலும் பேசிக்கோங்க, சபைல பேசுறதால தான் நடிகைகளை சோசியல் மீடியாவில் இழிவா பேசுறாங்க. அதற்கான வழிவகுத்து கொடுக்குறதே இந்த மாதிரி நடிகர்கள் தான். இனி வரும் காலங்களில் இதுபோன்று நாகரீகம் தெரியாதவர்களை மேடை ஏத்தாதீங்க என காட்டமாக கூறினார். இதையடுத்துப் பாட்னர் படக்குழு சார்பில் ரோபோ சங்கரின் பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக ஜான் விஜய் தெரிவித்தார். இதனால் அங்கு சிரிது நேரம் பரபரப்பு நிலவியது.
இதையும் படியுங்கள்.... எளிமையாக நடந்த மெரினா ஆடியோ லான்ச் vs மாவீரன் Pre Release Event - சிவகார்த்திகேயனின் விஸ்வரூப வளர்ச்சி!