இருவருக்கும் இடையே இருந்த அலாதியான நட்பே, திரையிசையில் பல அழகிய ஜாலங்களை கொண்டு வந்து சேர்த்தது. இளமை ததும்பும் காதல் பாடல்களாக இருக்கட்டும், இதயம் உருகும் சோக பாடல்களாக இருக்கட்டும், தன்னிலை உணர்த்தும் தத்துவ பாடல்கள் ஆகட்டும், எல்லா வகையிலும் இவர்களது பாடல்களுக்கு என்று தனி மவுசு உண்டு.
கேரளாவில் பாலக்காடு அருகே உள்ள எலப்புள்ளி கிராமத்தில் 1928-ம் ஆண்டு பிறந்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். 4 வயதிலேயே தனது தந்தையை இழந்த அவர், கண்ணனூரில் உள்ள தன் தாத்தா கிருஷ்ணன் வீட்டில் வளர்ந்தார்.