J. Jayalalithaa: மறக்க முடியுமா... இரும்பு பெண்மணி ஜெயலலிதா பற்றிய நினைவுகளின் அரிய தொகுப்பு!

First Published Dec 5, 2021, 12:02 PM IST

ஏழை மக்களின் பசியை போக்கும் விதமாக மிகவும் குறைந்த விலையில் அம்மா உணவகம் நிறுவி, பலரின் பசியை நீக்கி வருபவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா.  மேலும் ஏழைகளுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கும் விதமாக அம்மா மருந்தகத்தையும் நிறுவினார். இவரது, இந்த திட்டங்கள்... இவர் மறைந்தாலும் இன்று வரை பலருக்கு உதவி வருகிறது.

சென்னையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் சுமார் 70 நாட்கள் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5ஆம் தேதி, 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா உயிரிழந்தார். இந்த இரும்பு பெண்மணியின் மறைவு ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் மூழ்கடித்தது. இந்நிலையில், இன்று இவரது 5 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது வருகிறது. எனவே இன்று காலை முதல் மெரினா கடற்கரையில் அமைந்துள்ள இவரது நினைவிடத்தில், அதிமுக தலைவர்கள், தொண்டர்கள், மற்றும் பிற கட்சி தலைவர்கள் தொடர்ந்து  அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

இவருடைய நினைவு தினத்தில்... இவரை பற்றி என்றும் மனதை விட்டு நீங்காத நினைவுகளின் நினைவுகள் மற்றும் அரிய புகைப்படங்களின் தொகுப்பு இதோ...

ஜெயலலிதா கர்நாடகா மாநிலத்தில் உள்ள மாண்டியா என்னும் பகுதியில், ஜெயராம் மற்றும் வேதவல்லி என்னும் தம்பதியினருக்கு மகளாக பிறந்தவர். இவரது பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் கோமளவல்லி.

தன்னுடைய 3 வயதில் இருந்தே, பாரத நாட்டியம் கற்றுக்கொண்டவர் ஜெயலலிதா. படிப்பில் படு கெட்டி என்றாலும் சினிமா துறையில் எதிர்பாராத விதமாகவே நுழைந்தார்.

அம்மாவின் ஆசைக்காக நடிப்பில் காலடி எடுத்து வந்த இவருக்கு, இவரது அழகும், திறமையும் அடுத்தடுத்து பல படங்களின் வாய்ப்புகளை பெற்று தந்து, முன்னணி நடிகையாக நிலைக்க செய்தது.

அந்த காலத்து நடிகைகள் டைட் மாடர்ன் டிரஸ் போட்டு நடித்த காலத்திலேயே... முதல் முதலில் ஸ்லீவ் லெஸ் உடை அணிந்து நடித்தவர் ஜெயலலிதா தான் என கூறப்படுகிறது.

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் நடித்த நடிகை என்கிற பெருமையும் இவருக்கு உண்டு. இதுவே இவரை முன்னாள் தமிழக முதல்வரும், நடிகருமான எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவை அரசியலுக்கு அழைத்து வர ஏதுவாக அமைந்தது.

இவரது ஆங்கில புலமை இன்றியமையாதது... எங்கேனும் வெளியில் செல்லும்போது கூட புத்தகங்கள் அதிகம் வாசிப்பதற்காக, நிறைய புத்தகங்களை தன்னுடன் எடுத்து செல்வார்.

வாசிப்பு மட்டும் அல்ல எழுதுவதிலும் மிகவும் ஆர்வம் கொண்டவர். "தாய்" தமிழ் வார இதழில் தொடர்ந்து எழுதி வந்தார்.

தமிழ் நடிகைகளில் அதிக வெள்ளி விழா படங்களில் (80) நடித்த நடிகை எனும் சாதனைக்கு சொந்தக்காரர் ஜெயலலிதா. இவர் தெலுங்கில் நடித்த 28 படங்களுள் வெள்ளி விழா படங்கள். இவர் நடித்த ஒரே இந்தி படமும் (Izzat) வெற்றி படம் என்பது குறிப்பிடத்தக்கது.

உதவுவதில் தாய்மை உள்ளம் கொண்டவர்... மாணவர்களின் கல்வி, ஏழை மக்களுக்கு உதவி, நடிகர்களின் தேவையறிந்து உதவுதல் என, இவரது உதவிகளை சொல்லிக்கொண்டே போகலாம்.

நடிகையாகவும், அரசியல்வாதியாகவும் அறியப்பட்ட இவருக்கு... பாடகி என்கிற முகமும் தமிழ் திரையுலகில் உண்டு. சுமார் 10 பாடல்களை பாடியுள்ளார். இதில் 5 பாடல்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!