அப்பாவை முந்திக்கொண்ட மகள் சௌந்தர்யா! கொரோனா நிவாரணத்திற்கு ரஜினிகாந்த் மகள் ரூ.1 கோடி நிதியுதவி!

First Published May 14, 2021, 11:58 AM IST

முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்காக பிரபலங்கள் மற்றும், தொழிலதிபர்கள் தொடர்ந்து உதவிக்கரம் நீட்டி வரும் நிலையில், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா நிதி உதவி வழங்கியுள்ளார்.
 

கொரோனாவின் முதல் அலையை விட இரண்டாவது அலை மக்களை அதிகம் வாட்டி வதக்கி வருகிறது. தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் அதிகரித்து கொண்டே செல்வதால், மத்திய - மாநில அரசுகள் மக்களை கொரோனா தாக்கத்தில் இருந்து காப்பாற்ற துரிதமாக செயல்பட்டு வருகிறது.
undefined
படுக்கைகள், ஆக்சிஜன் தேவை, வெண்டிலேட்டர் , தடுப்பூசி போன்றவையின் தேவைகள் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. 18 வயதை கடந்த பலர் தடுப்பூசி கிடைக்காமல் போடமுடியாது நிலை உருவாகியுள்ளது.
undefined
இந்நிலையில் தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசி, ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், வெண்டிலேட்டர்கள் உள்ளிட்ட மருத்து உபகரணங்களை வாங்க, முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி அளிக்க வேண்டுமென மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.
undefined
இவரது கோரிக்கையை ஏற்று தற்போது நிதி உதவிகள் கிடைக்க துவங்கியுள்ளது. ஏற்கனவே நடிகர் சூர்யா ரூ.1 கோடி, அஜித் ரூ.25 லட்சம் நிதி உதவி வழங்கிய நிலையில் அவரை தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா கொரோனா நிர்வாணத்திற்கு நிதி உதவி வழங்கியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
undefined
அதாவது ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா அவர்களது, Apex Laboratory நிறுவனம் சார்பாக முதல்வர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கியுள்ளார்.
undefined
மேலும் ரஜினிகாந்த் இந்த நிவாரணம் வழங்கியதாக வெளியாகும் தகவலில் உண்மை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பாவை முந்தி கொண்டு, மக்கள் நலன் கருதி நிதி உதவி வழங்கியுள்ள, சௌந்தர்யா ரஜினிகாந்துக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
undefined
click me!